Skip to main content

Posts

Showing posts from March, 2020

ஆஸ்பத்திரி காட்சி | தி. ஜ. ரங்கநாதன்

ஆஸ்பத்திரியில் மிகவும் ஒழுங்காக காந்தி நடந்துகொண்டார். இது டாக்டருக்கு மகிழ்ச்சி அளித்தது ; நர்ஸுக்குப் பிரியமாயிருந்தது. எல்லாரும் காந்தியிடம் அன்பு கொண்டார்கள். ஒரு நர்ஸ் இங்கிலீஷ்காரி. இங்கிலாந்து , ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் ஆஸ்பத்திரிகளிலும் பணிபுரிந்தவள் ; நீண்ட கால அனுபவம் உடையவள். மிகவும் கண்டிப்பாய் நடப்பவள். " நோயாளிகளிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படாதே. அதற்கு ஒரு நாளும் முயற்சி செய்யாதே" இப்படித்தான் அவளுடைய டாக்டர்கள் சொல்வார்களாம். காந்திக்கு இதை எல்லாம் அவள்தான் சொன்னாள். மூன்று நாள்கள் சென்றன. காந்தி மீது அவள் பற்று கொண்டாள். காந்தியின் அறையை அலங்காரம் செய்தாள். பூக்களைக் கொண்டுவந்தாள் ; அழகழகாய் ஜோடித்து வைத்தாள். " எப்படி இருக்கிறது அறை ? என் கைவேலையைப் பார்த்தீர்களா ?" என்று காந்தியைக் கேட்டாள். அங்கு இன்னொரு நர்ஸ் இருந்தாள். அவள் மிக இளம் பெண். "என் மனத்துக்கு இசைந்த முதல் நோயாளி இவர்தாம். காந்திக்குப் பணிவிடை செய்வதே ஓர் இன்பம். அது எனக்குக் கிடைத்த பாக்கியம் ” என்றாள். அவள் காந்தி பற்றி நல்ல அறிக்கை எழுதினாள் ; அதில் அவர

அறுவை சிகிச்சை | தி. ஜ. ரங்கநாதன்

முதல் சிறைவாசத்தில் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. காந்திக்குக் குடல் அநுபந்த நோய் வந்தது. வயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. அதைக் கண்டு சிறையின் மேல் அதிகாரி பயந்தார். தமது காரிலே காந்தியை ஏற்றிக் கொண்டார். சிறைக்கு வெளியே புனா நகரில் ஸாஸூன் ஆஸ்பத்திரி இருக்கிறது. அவரை அங்கே கொண்டுபோய்விட்டார். கர்னல் மேடாக் என்ற ஆங்கிலேயர் அங்கே பெரிய சர்ஜன். “ உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லாவிட்டால் நோய் கடுமையாகிவிடும் ” என்று அவர் சொன்னார். காந்தி இணங்கினார். " உங்கள் சொந்த டாக்டர்கள் இருப்பார்கள் அவர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டுமா ?" என்று அதிகாரிகள் அவரைக் கேட்டார்கள். " பம்பாயில் டாக்டர் தலால் என்பவர் இருக்கிறார் ; பரோடாவில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா என்பவர் இருக்கிறார். இருவரையும் வரவழையுங்கள் '' என்றார் காந்தி. காந்தி தெரிவித்த டாக்டர்களுக்கு அப்படியே செய்தி அனுப்பினார்கள். ஆனால் , காந்தியின் நாடித்துடிப்பு மோசமாயிற்று. காய்ச்சல் கடுமையாயிற்று. உடனே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் ; இல்லாவிட்டால் காந்தியின் உயிருக்கே ஆபத்து என்னும் நில

முதல் சிறைவாசம் | தி. ஜ. ரங்கநாதன்

காந்தி எப்போதும் அநீதியை எதிர்த்தார். அதனால் பல முறை சிறை புகுந்தார். தென் ஆப்பிரிக்காவில்தான் அவரது முதல் சிறைவாசம் ; அப்புறம் இந்தியாவில். இங்கே முதல் முறை ஆறாண்டு சிறைத்தண்டனை பெற்றார். எரவாடா சிறையில் அவரை வைத்தார்கள். சிறை அதிகாரி அவரிடம் முரட்டுத்தனமாய் நடந்தார். இடுப்புத்துணிதான் காந்தி உடுத்திருந்தார். ஆனால் , அவரைத் தினமும் அதிகாரி சோதிப்பார். அவருடைய இடுப்பைத் தடவிப் பார்ப்பார் ; கம்பளிகளை உதறுவார் ; மலஜலப் பானையைப் பூட்ஸால் உதைப்பார். இவற்றையெல்லாம் பார்த்துக் காந்தி வருத்தப்பட்டார். அதிகாரியோடு வாதித்தார். "இவையெல்லாம் நியாயம் இல்லை" என்றார். நயமாகவே எடுத்துரைத்தார். அதிகாரி சிறிது மனம் மாறினார். காந்தியைக் கொஞ்சம் மரியாதையாக நடத்தினார். மற்ற கைதிகளும் சற்று வசதி பெற்றார்கள். சிறை கட்டுப்பாடுகளை காந்தி ஒருபோதும் மீறமாட்டார். அவற்றுக்குத் தாமாக உட்படுவார். முதல் முதல் ராஜாஜி , காந்தியின் முதல்வர் தேவதாஸ் - இந்த இருவரும் காந்தியைப் பேட்டி கண்டார்கள். சிறை அதிகாரியும் கூடவே இருந்தார். அவர் காந்திக்கு ஆசனம் அளிக்கவில்லை. காந்தி நின்றுகொண

பறக்கும் வித்தை | தி. ஜ. ரங்கநாதன்

குழந்தைகளிடம் காந்திக்கு மிகுந்த அன்பு. அவர்களை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார். அவருடைய ஆசிரமத்தில் பல குழந்தைகள் இருந்தன. காந்தி வெளியூர்களில் எங்கே இருந்தாலும் சரி , ஆசிரமக் குழந்தைகளுக்குத் தவறாமல் கடிதம் எழுதுவார். அப்போது இந்தியா சுதந்தரம் அடையவில்லை. அந்நிய சர்க்கார் இதை ஆண்டது. அந்தக் சர்க்காரைக் காந்தி எதிர்த்தார். பல முறை போராட்டம் நடத்தினார் ; பல முறை சிறைப்பட்டார். அவற்றுள் ஒன்று உப்புச் சத்தியாகிரகம். அப்போது அவர் சிறைப்பட்டார். ஏரவாடா சிறையில் அவர் இருந்தார். அந்த நாளிலும் ஆசிரமக் குழந்தைகளை அவர் மறக்கவில்லை ; அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஒரு கடிதம் மிக்க அருமையானது. அது இதுதான்: சின்னஞ்சிறு குருவிகளே! சாதாரணக் குருவிகள் இருக்கின்றன. அவற்றுக்குச் சிறகு உண்டு. அது இல்லாவிட்டால் அவற்றால் பறக்க முடியாது. சிறகு இருந்தால் யார்தான் பறக்க முடியாது ? யாருந்தான் பறக்க முடியும் ஆனால் , சிறகு இல்லாமலே பறப்பது எப்படி ? அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது உங்கள் தொல்லைகள் எல்லாம் நீங்கிவிடும். சிறகு இல்லாமலே நீங்கள் பறக்கலாம். அதை நான் கற்றுக்கொடுக்கிறேன்

சிறுமியின் தங்க நகை | தி. ஜ. ரங்கநாதன்

‘ ஹரிஜன பணி மிகவும் முக்கியம் ’ - இப்படி எண்ணினார் , காந்தி. ' ஹரிஜனங்களை உயர்த்த வேண்டும் ; இதற்குப் பணம் வேண்டும் ' என்றார். ஊர் ஊராய் இதற்காக வந்தார். கன்னட நாட்டில் உடுப்பி என்ற ஊர் இருக்கிறது. அங்கே கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. அது மிகவும் புகழ்பெற்றது. உடுப்பிக்குக் காந்தி சென்றார். பலர் வரவேற்பு அளித்தார்கள். ஹிந்திப் பிரச்சார சபையினரும் ஒரு வரவேற்பு அளித்தார்கள். வரவேற்புப் பத்திரம் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. ஒரு சிறுமி அதை வாசித்தாள். அவளுக்கு வயது ஒன்பது ; பெயர் நிருபமா. அந்த வயதிலேயே ஹிந்தி கற்றிருந்தாள். ஹிந்தியில் பேசுவாள் , எழுதுவாள். கழுத்திலும் கையிலும் தங்க நகைகள் அணிந்திருந்தாள். பத்திரம் வாசித்து முடித்தாள். காந்தியிடம் அளித்தாள். அப்போது காந்தி சொன்னார்: "பத்திரத்தைக் கொடுக்கிறாய். சரி ; வாங்கிக் கொள்கிறேன். நகைகள் போட்டிருக்கிறாயே! அவற்றையும் கொடுப்பாயா ?" நிருபமா தயங்கவில்லை. கழுத்திலே தங்கச் சங்கிலி இருந்தது. அதைக் கழற்றினாள். காந்தியிடம் கொடுத்தார் " ஆமாம். உன் கையில் தங்க வளையல் இருக்கிறதே! அதையு

சிறுவனின் அன்புப் பரிசு | தி. ஜ. ரங்கநாதன்

காங்கிரஸ் மகாசபை கூடியிருந்தது. காந்தி தமது கூடாரத்தில் இருந்தார். ஏதோ தேடிக்கொண்டிருந்தார். வெகு கவலையோடு தேடினார். பரபர என்று தேடினார். காகா காலேல்கர் அங்கே வந்தார். அவர் ஒரு பேராசிரியர் ; பெரிய படிப்பாளி. ஆசார்ய காலேல்கர் என்று அவரைச் சொல்வார்கள். " பாபு , என்ன தேடுகிறீர்கள் ?" என்று ஆசார்யா கேட்டார். " ஒரு சிறு பென்சிலை தேடுகிறேன்" என்றார் காந்தி. காலேல்கர் தமது கைப்பையைத் திறந்தார். ஒரு பெரிய பென்ஸிலை எடுத்து."இந்தாருங்கள். இதை வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறு பென்சில் போனால் போகிறது" என்றார். பென்சிலைக் காந்தியிடம் கொடுத்தார். " இல்லை , இல்லை. எனக்கு இது வேண்டாம். அந்தச் சின்ன பென்சில்தான் வேண்டும்" என்று காந்தி சொன்னார். " இப்போது அதை உபயோகியுங்கள் பாபு. அப்புறம் அதை நான் தேடி எடுத்துத் தருகிறேன் " என்று காலேல்கர் சொன்னார். " இல்லை , காகா. அந்தப் பென்சில் எவ்வளவு முக்கியமானது , தெரியுமா ? உங்களுக்குத் தெரியாது. அது காணாமற்போகக் கூடாது" என்றார் காந்தி. காலேல்கர் கேட்டார்: "

கோயில் சிலை | தி. ஜ. ரங்கநாதன்

'அரிச்சந்திரன் உண்மையே பேசுவான் ; ஒரே ஒரு பொய்கூடச் சொல்ல மறுத்தான். அதனால் நாட்டை இழந்தான் ; மனைவியைப் பிரிந்தான் ; மகனை இழந்தான் ; துன்பங்களை அனுபவித்தான். அவனைப் போலவே ஏன் எல்லாரும் உண்மையே பேசக்கூடாது ?' இப்படி எண்ணினார் , காந்தி. அப்போது அவர் சிறு பையன். இரவும் பகலும் அவர் அரிச்சந்திரனைப்பற்றியே நினைத்தார். ' அரிச்சந்திரனைப் போலவே நான் நடப்பேன் ' என்று உறுதி கொண்டார். காந்திக்குப் பல தோழர்கள் உண்டு. எல்லாரும் களிமண் பொம்மை செய்வார்கள். அதைச் ' சுவாமி ' என்று சொல்லுவார்கள். அந்தச் சுவாமிக்கு ஊர்வலம் நடத்துவார்கள். ஒருநாள் அவர்களுக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.  "இந்த மண் பொம்மை வேண்டாம். கோயிலுக்கு போவோம். அங்கே சுவாமி சிலை இருக்கிறது அல்லவா ? அதை எடுத்து வருவோம். அலங்காரம் செய்வோம். ஊர்வலம் நடத்துவோம். அது மிகவும் நன்றாய் இருக்கும். அல்லவா ?" என்றான் ஒரு தோழன். " சரியான யோசனை!" என்றார்கள் , மற்றவர்கள். கோயிலுக்கு யார் போவது ? சிலையை யார் கொண்டுவருவது ? எல்லாரையும் விட சிறியவன் சாந்து. அவனை அனுப்பினார்கள்.