Skip to main content

சிறுமியின் தங்க நகை | தி. ஜ. ரங்கநாதன்

ஹரிஜன பணி மிகவும் முக்கியம்’ - இப்படி எண்ணினார், காந்தி. 'ஹரிஜனங்களை உயர்த்த வேண்டும்; இதற்குப் பணம் வேண்டும்' என்றார். ஊர் ஊராய் இதற்காக வந்தார்.
கன்னட நாட்டில் உடுப்பி என்ற ஊர் இருக்கிறது. அங்கே கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. அது மிகவும் புகழ்பெற்றது. உடுப்பிக்குக் காந்தி சென்றார்.
பலர் வரவேற்பு அளித்தார்கள். ஹிந்திப் பிரச்சார சபையினரும் ஒரு வரவேற்பு அளித்தார்கள். வரவேற்புப் பத்திரம் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது.
ஒரு சிறுமி அதை வாசித்தாள். அவளுக்கு வயது ஒன்பது; பெயர் நிருபமா. அந்த வயதிலேயே ஹிந்தி கற்றிருந்தாள். ஹிந்தியில் பேசுவாள், எழுதுவாள்.
கழுத்திலும் கையிலும் தங்க நகைகள் அணிந்திருந்தாள்.
பத்திரம் வாசித்து முடித்தாள். காந்தியிடம் அளித்தாள்.
அப்போது காந்தி சொன்னார்: "பத்திரத்தைக் கொடுக்கிறாய். சரி; வாங்கிக் கொள்கிறேன். நகைகள் போட்டிருக்கிறாயே! அவற்றையும் கொடுப்பாயா?"
நிருபமா தயங்கவில்லை. கழுத்திலே தங்கச் சங்கிலி இருந்தது. அதைக் கழற்றினாள். காந்தியிடம் கொடுத்தார்
"ஆமாம். உன் கையில் தங்க வளையல் இருக்கிறதே! அதையும் கொடுத்துவிடேன்" என்றார் காந்தி.
வளையலையும் நிருபமா கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். அவளுடைய கண்ணிலே நீர் துளும்பியது. அதைக் காந்தி பார்த்துவிட்டார். அவளை முதுகிலே தட்டிக் கொடுத்தார்.
"நீ அழுகிறாய். இப்படிக் கொடுத்தால் நான் வாங்கமாட்டேன்" என்றார்.
வளையலை அவளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அங்கே நிருபமாவின் பெற்றோர் இல்லை.
ஒரு வீட்டிலே காந்தி தங்கினார். காந்தியோடு கூடவே நிருபமாவும் போனாள். அங்கே நிருபமாவின் பெற்றோர் வந்தார்கள்.
இந்தச் செய்தியை நிருபமாவின் அம்மாவுக்கு யாரோ சொன்னார்கள்.
நிருபமாவிடம் அம்மா சொன்னாள்: அசடே காந்தி கேட்டால் அழலாமா? வளையலையும் கொடுத்துவிடு."
உடனே வளையலை நிருபமா மறுபடி கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். காதுத் தோட்டையும் கழற்ற முயன்றாள். காந்தி தடுத்தார்.
"வேண்டா, வேண்டா. அதை நீயே வைத்துக்கொள் இது போதும் எனக்கு" என்றார். நிருபமா, சரி என்று பேசாதிருந்தாள்.
மறுபடியும் காந்தி சொன்னார்: "நகைகளைக் கொடுத்தாய். இது எனக்குச் சந்தோஷம் தருகிறது. ஆனால், ஒன்று; இனி நீ ஒருநாளும் நகையே அணியக்கூடாது. சரிதானா?"
"சரி, நான் இனிமேல் நகை அணிய மாட்டேன்" என்றாள் நிருபமா. நாற்பதாண்டு உருண்டோடியது. நிருபமா சொன்னபடி நடந்தாள். அவள் நகையே அணியவில்லை. டாக்டர் வேலைக்குப் படித்தாள்; பட்டமும் பெற்றாள்.
நிருபமாவுக்கு காந்தி கடிதம் எழுதுவார். அவளும் அவருக்கு எழுதுவாள். கடிதங்கள் இந்தியில்தான் இருக்கும்.
மேடையில் ஏறி நிருபமா பேசுவாள். அதில் அவளுக்கு ஆசை. அவளுக்கு அசாத்தியக் கூச்சம்; கூட்டத்தில் பேச வராது. கண்ணீர் சொரிவாள்.
காந்திக்கு அவள் இதை எழுதினால் அதற்குக் காந்தி பதில் எழுதினார்: "நீ இன்னும் சிறு பெண். அதனால்தான் உனக்கு அழுகை வருகிறது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேடையில் ஏறாதே, பேசாதே. தனியே இருப்பாய் அல்லவா? அப்போதெல்லாம் உரத்துப் பேசிப் பழகு. ஆசையை இப்படி அடக்கு. அதனால் உன் திறமை பெருகும். மேடையில் பேசத் தானாக வந்துவிடும்."

அடுத்தக் கதை: பறக்கும் வித்தை

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர