Skip to main content

Posts

Showing posts from December, 2019

விமர்சனக் கட்டுரைப் போட்டி 2019 - முடிவு

நண்பர்களுக்கு வணக்கம், 2019 விமர்சனக் கட்டுரைப் போட்டிக்கு 18 கட்டுரைகள் வந்தன. மூன்று நடுவர்கள் அவற்றை மதிப்பிட்டனர். மூவரின் மதிப்பீடிலும் எந்த கட்டுரையும் பரிசுக்குரிய தகுதியுடன் இல்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தனர். ஆயினும் இருப்பவற்றில் ஒவ்வொரு நடுவரும் மூன்று கட்டுரைகளைத் தேர்வு செய்திருந்தனர். நடுவர்களின் கருத்துப்படி, பின்வருமாறு முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. தகுதியான கட்டுரை என ஏதும் இல்லாததால், போட்டி அறிவிப்பில் கூறிய பரிசுகளைப் பெற யாரும் தேர்வாகவில்லை. ஆனால், நடுவர்கள் தேர்வு செய்த கட்டுரைகளுக்காக பாலசுந்தர் (அம்புயாதனத்துக் காளி), கற்பக சுந்தரம் (சிவப்புப் பணம்), பிரபாகரன் சண்முகநாதன் (ஜார் ஒழிக) மற்றும் ஜான் மேரி (திகிரி) ஆகிய நான்கு பேருக்கும் 500 ரூபாய்க்கான புத்தகங்கள் அளிக்கப்படும். அவர்களுக்கு வாழ்த்துக்கள். பங்கேற்ற கட்டுரையாளர்களுக்கும் நடுவர்களாக இருந்த எழுத்தாளர்கள் பாவண்ணன், எம். கோபாலகிருஷ்ணன் மற்றும் க. மோகனரங்கன் ஆகியோருக்கும் போட்டி அறிவிப்பை தன் தளத்தில் வெளியிட்டு உதவிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நன்றிகள். அழிசி.

அவர் காண விரும்பிய நாடு | அண்ணா

“ பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் , உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக்கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன்." இதுவே , உலக உத்தமர் காந்தியாரின் இலட்சியம் என்று அறிவிக்கிறார் பண்டித நேரு. ஒரு நாடு , அன்னியரிடம் அடிமைப்பட்டு , விடுதலைப் போர் தொடுத்து , பிறகு தன்னாட்சி பெறுவது , மகத்தானதோர் சம்பவம் - உலக வரலாற்றில் , ஒவ்வொரு சமயம் , படை பலத்தாலோ இராஜ தந்திர பலத்தாலோ , ஏதேனும் ஒரு நாடு பிறநாடுகளை அடிமை கொள்வதும் அடிமைப்பட்ட நாட்டின் செல்வத்தைச் சுரண்டுவதும் உலக வரலாற்றிலே எங்கோ ஓர் மூலையிலே காணப்படும் சிறு விஷயமல்ல. அந்த வரலாற்றிலே மிக முக்கியமான பகுதியே , இந்த சம்பவத்தைக் கொண்டதுதான். அலெக்சாண்டர் , ஜுலியஸ் சீசர் போன்ற அதிமகாவீரர்கள் கால முதற்கொண்டு , பெர்லின் சர்வாதிகாரி ஹிட்லர் காலம் வரையிலே , இந்த நாடு பிடிக்கும் போக்கு , இருந்தவண்ணமிருக்கிறது. அவர்கள் காலத்திலே , போர்த்திரனோடு வீர உணர்

கன்னத்தில் பலமான அறை | ஜி. டி. பிர்லா

1933 ஆம் வருஷம் ஏப்ரல் 29 ஆம் தேதி. அந்நாட்களில் ஹரிஜனப் பிரச்சினை காந்தியடிகளை மிகுந்த யோசனையிலாழ்த்தி வந்தது. எரவாடா ஒப்பந்தத்திற்குப் பிறகு தேசத்தில் ஒரு புதிய ஊக்கம் உண்டாகியிருந்தது. பல விதங்களிலும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஹரிஜனங்களுக்குச் செய்த கொடுமையை எண்ணி உயர்ந்த ஜாதி ஹிந்துக்கள் பச்சாத்தாபப்படத் தொடங்கினார்கள். ஹரிஜன சேவா சங்கம் பலமாகத் தன் சேவைகளை விஸ்தரித்து வந்தது. காந்தியடிகளின் வியாஸங்கள் ஹரிஜன வேலையில் ஓர் புதிய எழுச்சியை உண்டாக்கின. சத்யாக்கிரஹம் ஓய்ந்துவிட்டது. காந்தீயம் இனி என்றும் எழாதவாறு அழிந்துவிடப் போவதாக வில்லிங்டன் நம்பியிருந்தார். ஆனால் பிரதம மந்திரி ராம்ஸே மாக்டனால்டின் தீர்ப்பை எதிர்த்து காந்தியடிகள் மேற்கொண்ட மரணம் வரை உபவாஸமானது , ஒரே நொடியில் தேசத்தில் பரவியிருந்த சோர்வை நீக்கி , மக்களிடை புத்துயிரை உண்டாக்கிவிட்டது. மக்கள் சத்யாக்கிரஹத்தை அப்படியே விட்டுவிட்டு , ஹரிஜன வேலையில் மும்முரமாய் இறங்கினார்கள். இது தெய்வீகச் செயலாகும். பல வருஷங்களாக காந்தியடிகள் ஹரிஜன வேலைக்குப் பிரசாரம் செய்து வந்தார். ஆனால் உயர் வருண ஹிந்துக்களின் இதயத்தைத் தட்டியெழுப்