Skip to main content

Posts

Showing posts from October, 2019

பல ரூபங்களில் காந்தி: தையல்காரர் | அனு பந்தோபாத்யாயா

தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வசித்த காலத்தில் அவருக்கு இரண்டு தடவை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சில வாரங்கள் வரை அவர் நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேரம் கிழிந்த போர்வைகளையும் , சட்டைகளுக்குப் பைகளையும் தைத்து வந்தார். அவருக்குத் தரப்பட்ட பணிகளை காலக்கெடுவுக்குள் முடித்துக் கொடுத்ததோடு அல்லாமல் , மேலும் பணி வேண்டும் என்று கேட்பது அவரது வழக்கம்.   இந்தியச் சிறையில் சில நாட்களுக்கு ஸிங்கர் தையல் எந்திரத்தில் தையல் வேலை செய்தார். சிறைப் பணிகளை அவர் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்து வந்தார். மனிதர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து வரும் எந்திரங்களுக்கு மனிதன் அடிமையாகிவருவதை அவர் எதிர்த்தார். மனித உழைப்பை அகற்றித் தேவையற்றதாக்கிவிடும் எந்திரங்களை நாம் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இந்தியாவைப் பொருத்தவரை கோடிக்கணக்கான மக்களுக்கு ஓய்வு நேரம் எப்போது கிடைக்கும் என்பது பிரச்சினை அல்ல ; அவர்கள் பணி ஏதும் இன்றி ஓய்ந்து கிடக்கிறார்கள் ; அந்த நேரத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவழிக்க முடியும் என்பதுதான் பிரச்சினை. தையல் எந்திரத்திற்கு மட்டும் காந்திஜி விதிவிலக்

பல ரூபங்களில் காந்தி: வழக்கறிஞர் | அனு பந்தோபாத்யாயா

காந்திஜி தனது பதினெட்டாவது வயதில் 10- வது பாஸ் செய்தார். அதற்குப்பின் , சட்டப் படிப்பிற்காக அவர் லண்டனுக்குச் சென்றார். அங்கு , இன்னர் டெம்பிள் கல்லூரியில் சேர்ந்ததும் சட்டப் பரீட்சைகளில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிடலாம் என்பதை அவர் உணர்ந்தார். புத்தகங்களின் குறிப்புகளை (நோட்ஸ்) இரண்டு மாதங்களுக்கு மட்டுமே படித்து , பலரும் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று வந்தனர். இப்படிக் குறிப்புகளைப் படித்து பரீட்சையில் தேர்ச்சி அடைவதில் காந்திஜிக்கு உடன்பாடு இல்லை , ஏமாற்று வேலையை அவர் அறவே வெறுத்தார். பாடப் புத்தகங்களை பணம் செலவழித்து வாங்கி , நிறைய நேரத்தை அப்புத்தகங்களைப் படிப்பதில் செலவழித்து வந்தார். பொதுவான சட்டம் பற்றிய தடித்த புத்தகங்களை அவர் ஒன்பது மாதங்கள்வரை ஊக்கமாகப் படித்தார். ரோமன் சட்டங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்காக அவர் ரோமன் மொழியைக் கற்றார். அக்காலத்திய பாரிஸ்டர்கள் “ டின்னர் பாரிஸ்டர்கள் '' என்று அழைக்கப்பட்டார்கள்.  ஏனெனில் மூன்றாண்டுகளில் அவர்களுக்கு மொத்தம் 12 தேர்வு நிலைகள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் ஆறு ' டின்னர் ' ( விருந்து சாப்பாடு) வீகம் மொத்தம் 72 டின

பல ரூபங்களில் காந்தி: உழைப்பாளி | அனு பந்தோபாத்யாயா

நிறைய கேஸ் கட்டுகள் உள்ள அந்த வக்கீல் தனது வாடிக்கையாளர்களிடம் , “ வழக்காடிப் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள். கோர்ட்டுக்கு அப்பால் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாடு செய்துகொள்ளுங்கள் ” என்று புத்திமதி சொன்னார். ஓய்வு நேரங்களில் இந்து , கிறிஸ்தவ , இஸ்லாமிய , பாரசீக , புத்த மதங்களைச் சார்ந்த நூல்களைப் படித்தார். சான்றோர்கள் எழுதிய வேறு சில புத்தகங்களையும் படித்தார். இப்படிப்பட்ட நூல்களைப் படித்து சிந்தித்தபின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சிறிதளவாவது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். மூளைக்கு வேலை கொடுத்தால் மட்டும் போதாது. படித்தவர்கள் , படிக்காதவர்கள் மருத்துவர்கள் , வக்கீல்கள் , நாவிதர்கள் , துப்புறவுத் தொழிலாளர்கள் , எல்லோருடைய பணிகளுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். தனது வாழ்க்கை முறையைப் படிப்படியாக மாற்றிக்கொண்ட அவர் , தன்னால் இயன்ற பணிகளை எல்லாம் செய்யத் தொடங்கினார். ஒரு ஆசிரமத்தைத் துவங்கி அதில் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து எளிமையான ஒரு சமூக வாழ்க்கை வாழவேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அவருடை

தீபாவளி யாருக்கு? - மகாத்மா காந்தி

சகோதர சகோதரிகளே , இன்று தீபாவளி. இத்தருணத்தில் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது இந்துக்களின் நாட்காட்டியில் ஒரு சிறப்பான நாள். விக்ரம் நாட்காட்டி 1 யின்படி நாளை , வியாழக்கிழமை புத்தாண்டு பிறக்கிறது. தீபாவளி ஒளிமயமாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த மகத்தான போரில் நன்மையின் சின்னமாக ராமனும் தீமையின் சின்னமாக ராவணனும் உள்ளனர். ராமன் ராவணனை வெற்றி கொண்டான். அந்த வெற்றி இந்தியாவில் ராம ராஜ்யத்தை நிறுவியது. ஆனால் இன்று இந்தியாவில் ராம ராஜ்யம் இல்லை. அப்படியானால் நாம் எப்படி தீபாவளியைக் கொண்டாட முடியும் ? யாரெல்லாம் ராமனைத் தன்னுள்ளேயே கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் இந்த வெற்றியைக் கொண்டாட முடியும். கடவுள் ஒருவரே நம் ஆன்மாவில் ஒளியேற்றக் கூடும். அந்த ஒளியே உண்மையான ஒளியாகும். இன்று பாடப்பட்ட பஜனை கடவுளைக் காண்பதற்கு அந்தக் கவிஞர் 2 கொண்டிருந்த விருப்பத்தையே வலியுறுத்துகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் செயற்கையான ஒளியைக் காணச் செல்கிறார்கள் ; ஆனால் , இன்று நமக்கு வேண்டியிருப்பது அகத்தில

அமேசானில் அக்டோபர் மாதச் சலுகை 2019

வெண்ணிற இரவுகள் | ₹19 https://amzn.to/2uUbewt லா.ச.ராமாமிர்தம் படைப்புகள் | ₹29 https://amzn.to/2mTGzP0 கிருஷ்ணா கிருஷ்ணா | ₹69 https://amzn.to/2kClELm ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் | ₹50 https://amzn.to/2KB5YGL சாயாவனம் | ₹129 http://bit.ly/Saayavanam ஸீரோ டிகிரி | ₹69 http://bit.ly/ZeroDegreeTamil அஜ்வா | ₹49 https://amzn.to/2oh5YTc புகார் நகரத்துப் பெருவணிகன் | ₹109 https://amzn.to/2EqrNF1 நீலம் | ₹129 http://bit.ly/NeelamJemo சத்திய சோதனை | ₹19 http://bit.ly/SathyaSothanai எங்கே இன்னொரு பூமி? | ₹29 http://bit.ly/EngeInnoruBhoomi நாவல் (கோட்பாடு) | ₹49 http://bit.ly/NovelKotpadu மகாத்மா காந்தி கொலை வழக்கு | ₹79 https://amzn.to/2R8KbGO சே குவேரா: வேண்டும் விடுதலை | ₹105 http://bit.ly/VendumViduthalai முதல் உலகப் போர் | ₹109 http://bit.ly/MuthalUlagaPor காஷ்மீர் இந்தியாவுக்கே! | ₹109 http://bit.ly/KashmirIndiavukke பயங்கரவாதம்: நேற்று-இன்று-நாளை | ₹129 http://bit.ly/Bayangaravadham