Skip to main content

பல ரூபங்களில் காந்தி: தையல்காரர் | அனு பந்தோபாத்யாயா


தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வசித்த காலத்தில் அவருக்கு இரண்டு தடவை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சில வாரங்கள் வரை அவர் நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேரம் கிழிந்த போர்வைகளையும், சட்டைகளுக்குப் பைகளையும் தைத்து வந்தார். அவருக்குத் தரப்பட்ட பணிகளை காலக்கெடுவுக்குள் முடித்துக் கொடுத்ததோடு அல்லாமல், மேலும் பணி வேண்டும் என்று கேட்பது அவரது வழக்கம். 
இந்தியச் சிறையில் சில நாட்களுக்கு ஸிங்கர் தையல் எந்திரத்தில் தையல் வேலை செய்தார். சிறைப் பணிகளை அவர் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்து வந்தார். மனிதர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து வரும் எந்திரங்களுக்கு மனிதன் அடிமையாகிவருவதை அவர் எதிர்த்தார். மனித உழைப்பை அகற்றித் தேவையற்றதாக்கிவிடும் எந்திரங்களை நாம் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இந்தியாவைப் பொருத்தவரை கோடிக்கணக்கான மக்களுக்கு ஓய்வு நேரம் எப்போது கிடைக்கும் என்பது பிரச்சினை அல்ல; அவர்கள் பணி ஏதும் இன்றி ஓய்ந்து கிடக்கிறார்கள்; அந்த நேரத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவழிக்க முடியும் என்பதுதான் பிரச்சினை. தையல் எந்திரத்திற்கு மட்டும் காந்திஜி விதிவிலக்கு அளித்தார். ஏனெனில் அது ஒரு பயனுள்ள கண்டுபிடிப்பு என்று அவர் எண்ணினார். தனது மனைவி ஊசியையும் நூலையும் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் போராடுவதைப் பார்த்து, “அவள்மீது கொண்டிருந்த அன்பு காரணமாக ஒரு தையல் எந்திரத்தை ஸிங்கர் கண்டுபிடித்தார். அந்த எந்திரத்தின் பின்னணியில் அன்பு உள்ளது" என்று காந்திஜி கூறுவார். 
காந்திஜி ஒரு தடவை ஒரு ஆசிரமவாசியான பெண்மணிக்கு எழுதிய கடிதத்தில் "உனது சல்வார் கமீஸ் தைப்பது பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அவற்றை என்னால் தயார் செய்துவிடமுடியும். ஒரு ஸிங்கர் எந்திரத்தை நாம் இரவல் வாங்குவோம். சில மணி நேரங்களில் உடுப்புகள் தயாராகிவிடும்." தனது தையல் பணி பற்றி அவருக்கு மிகவும் பெருமை. அவரே துணியை வெட்டி தனது மனைவியின் ரவிக்கைகளைத் தைத்துவிடுவார். ராட்டையில் நூல் நூற்று, நூற்ற நூலைத் தறியில் நெய்து, அத்துணியைக் கொண்டு தனது சட்டையைத் தானே தைத்துக்கொள்வார். புகழ்பெற்ற தையல் வல்லுநர்களும், செருப்பு தயாரிப்பவர்களும் ஆசிரமவாசிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வந்தனர். 
சம்பாரனில் விவசாயிகள் நியாயமற்ற, குறைந்த கூலியில் அவுரியைப் பயிரிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டபோது அதற்கெதிரான போராட்டத்தில் காந்திஜி ஈடுபட்டது நமக்குத் தெரிந்த விஷயம். அப்போது ஒரு ஆங்கிலேயப் பத்திரிகையாளர், “காந்திஜி, கிராமத்து விவசாயிகளைக் கவர்வதற்காகவே மேலை நாட்டு உடைகளைத் துறந்து இந்திய உடையை அணிந்துள்ளார்'' என்று கூறி அவரை அவமதித்தார். பதிலடியாக காந்திஜி, "சுதேசிக் கொள்கையை ஏற்று சபதம் எடுத்தபின் நான் கையினால் நூற்று கையினால் நெய்து, என்னாலோ என் சக ஊழியர்களாலோ தைக்கப்பட்ட துணியை மட்டுமே அணிவேன்" என்று பதில் கொடுத்தார். 
காந்திஜி சிறிது காலத்திற்குப்பின் சட்டையையும் துறந்துவிட்டார். இடுப்பில் ஒரு அரையாடையை மட்டுமே அணிந்தார். அப்போதும்கூட, தனது கைக்குட்டை, துண்டு, அரையாடை ஆகியவற்றின் மூலைகளை அவர் தைத்து வந்தார். துணிகளைத் தைத்த வண்ணம் தனது செயலாளருக்குக் கடிதங்களையும் 'டிக்டேட்' செய்வார் காந்திஜி. ஆகாகான் அரண்மனையில் சிறைவாசம் செய்த சமயத்தில் சிறையின் மேற்பார்வையாளருக்கு பிறந்த நாள் பரிசாகக் கதர்க் கைக்குட்டைகளை காந்திஜி வழங்கினார். 74 வயதான காந்திஜி ஒவ்வொரு கைக்குட்டையிலும் சிறையின் மேற்பார்வையாளரது இனிஷியல்களையும் பின்னல் (எம்ப்ராய்டரி) செய்திருந்தார். 
தனது மேற்பார்வையில் ஒரு பெண்மணியைத் தனது சால்வையைப் பல துண்டுக் கதர்த்துணிகளை இணைத்துத் தயாரித்து அளிக்கும்படி காந்திஜி கோரினார். பாரத நாட்டின் ஏழைப் பங்காளர் என்ற முறையில் அந்தச் சால்வையை அணிந்து வட்டமேஜை மகாநாட்டிற்குப்பின் இங்கிலாந்து அரசி அளித்த விருந்தில் காந்திஜி கலந்துகொண்டார். அவருக்கு ஆடம்பரம் அறவே பிடிக்காது. அதே சமயம், கசங்கிய அல்லது கிழிந்த உடைகளை யாராவது அணிவதும் அவருக்குப் பிடிக்காது. ஒரு தடவை அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் அவரது சகாவின் மேலாடையில் ஓர் ஓட்டை காணப்பட்டது. அதைப் பார்த்த காந்திஜி அவருக்கு இப்படி ஒரு குறிப்பை அனுப்பினார்: கிழிந்த உடைகளை அணிவது சோம்பலுக்கு அடையாளம். வெட்கப்பட வேண்டிய விஷயம். மாறாக, ஒட்டுத் தையலுடன் கூடிய துணியை அணிவது எளிமை அல்லது தியாகத்திற்கு உதாரணம். உங்களது மேலாடையில் உள்ள ஓட்டை அருவருப்பாக உள்ளது. அது ஏழ்மையையோ எளிமையையோ காட்டவில்லை. மாறாக, அது காட்டுவது என்னவென்றால் உங்களுக்கு மனைவி இல்லை; அல்லது உங்கள் மனைவி மோசமானவள் அல்லது நீங்கள் ஒரு சோம்பேறி"
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல