Skip to main content

Posts

Showing posts from February, 2020

கடைசி நோய் | சாந்திகுமார் மொரார்ஜி

ஆகாகான் சிறையில் கஸ்தூர்பா நோய்வாய்ப்பட்டபோது அவருக்கு வேண்டிய மருந்து ,  டாக்டர் ,  வைத்தியர் முதலியோரைச் சந்திக்கவோ சிறையினுள் போய்ப் பார்க்க அனுப்பவோ வேண்டிய பொறுப்பு பர்ணகுடிப் பிரேமலீலா பஹனையும் என்னையும் சேர்ந்திருந்தது. நான் பர்ணகுடியில் அத்தை பிரேமலீலா பஹனுடனேயே தங்கி எல்லா ஏற்பாடுகளுக்கும் உதவி புரிந்துவந்தேன். டாக்டர் ஸுசீலாவும் டாக்டர் கில்டரும் ஆகாகான் சிறையில் கூடவே இருந்துவந்தார்கள். ஸர்க்கார் டாக்டர்களும் இருந்தார்கள். டாக்டர் மருந்துகளால் குணம் காணவில்லை என்றதும் நாட்டு வைத்தியம் பார்க்கத் தீர்மானித்தார்கள். டாக்டர் கில்டருக்கும் ஸுசீலா நய்யாருக்கும் நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை கிடையாது. கடைசியில் வேறு வழியில்லாமல் அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். இதற்குப் பிறகு ஆயுர்வேதத்தில் பிரசித்திபெற்ற சிவசர்மா வைத்தியர் அழைக்கப்பட்டார். அவர் வந்து கஸ்தூர்பாவைப் பரிசோதித்துப் பார்த்து மருந்து  கொ டுக்கத் தொடங்கினார். அவர் பர்ணகுடியில் தங்கிப் புனா நகரத்திலுள்ள வைத்தியர்களிடமிருந்து தினமும் மருந்து ,  பச்சிலைகள் ,  மூலிகைகள் வரவழைத்து மருந்து தயார் செய்து கொண்டுவந்து கொடுப்

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு