Skip to main content

Posts

Showing posts from May, 2019

நாகம்மாள்: முன்னுரை

முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன். இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன் , ராமாயி , கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள். கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுப

அவரவருக்கு வேண்டிய மகாத்மா | ராமாநுஜம்

சந்நியாசம் ஏற்காமல் ஆதி சங்கரன் அத்வைதம் பேசியிருக்க முடியாது. துறவறம் ஏற்காமல் புத்தன் சாத்தியமில்லை. நிர்வாணத்தைக் கொண்டாடாமல் மகாவீரர் அகிம்சையை முன்நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை விட்டெறியாமல் காந்தி மகாத்மாவாகியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை அணியாமல் அம்பேத்கர் ஜாதி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி இருக்க முடியாது. கலாசாரத்தில் ஒதுக்கப்பட்ட கறுப்பு நிறத்தைக் கொண்டாடாமல் பெரியாரியம் சாத்தியமில்லை. இதை வைத்து நாம் சூத்திரங்களை உருவாக்க முடியாது என்றாலும் உள்ளடக்கத்திற்கும் , வடிவத்திற்கும் உள்ள இணைவை நாம் போற்ற முடியும். இந்த உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவைக் காந்தி ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றார். உடலின் சாத்தியங்களை இதற்குமுன் வரலாற்றில் காணாத அளவிற்கு விரிவுபடுத்தினார். அரசியல் போராட்டம் ஆகட்டும் , ஆன்மீகச் சிந்தனையாகட்டும் , சமூகச் சீர்திருத்தங்கள் ஆகட்டும் , அறிவியல் விஞ்ஞான தொழில்நுட்பச் சிந்தனையாகட்டும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் தன் உடலையே காந்தி மையப்படுத்தினார். காந்தி முன்வைத்த உடல் என்பது மதங்கள் போற்றிய வரையறைகளுக்கு வெளியே இருந

மகாத்மா போற்றிய வளையல்கள் | எஸ். வி. ராமகிருஷ்ணன்

ஆகஸ்டு புரட்சியை ஒட்டி காந்திஜி சிறை வைக்கப்பட்ட புனே ஆகாகான் மாளிகை இன்று காந்தி நினைவு இல்லம். அப்போதைய ஆகாகான் இந்த அரண்மணையை இந்திய அரசாங்கத்துக்கு நன்கொடையாக அளித்ததைத் தொடர்ந்து இதை ஒரு தேசிய டிரஸ்ட் நிர்வகிக்கிறது. 1976 என்று நினைவு, நான் முதன் முறையாக இந்த இல்லத்துக்குச் சென்றேன். எனக்கு மாளிகையைச் சுற்றிக்காட்டிய ஊழியருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சில விஷயங்களைப் பற்றி தனக்கு முழு விவரங்கள் தெரியாது என்றார். ஆனால் காந்தியடிகள் காவலில் இருந்த சமயம் அங்கு பணியாற்றிய ஒருவர் தற்சமயம் டிரஸ்ட் ஊழியத்தில் இருக்கிறார்; அவருக்கு எல்லாம் தெரியும் என்றும் கூறி ரகுநாத்தை அழைத்து வந்தார். எனக்குப் புதையல் கிடைத்த மாதிரி இருந்தது. அவர் சுவாரசியமான பல விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில எந்தப் புத்தகத்திலும் வராதவை. ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் 1942 ஆகஸ்டு பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்று பிரிட்டிஷ் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே ரகசியத் தகவல் கிடைத்தது. எல்லாத் தலைவர்களையும் கூண்டோடு கைது செய்யவும் அதனால் வரக்கூடிய கொந்தளிப்பை அடக்கவும், அதுவரை காணாத பயங்கர அடக்கும