Skip to main content

Posts

Showing posts from January, 2020

மகாத்மாஜியின் கோபம் | தி. சு. அவினாசிலிங்கம்

Photo | National Gandhi Museum மகாத்மாஜி கரூரில் வந்து சேருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே நான் கரூர் போய்ச்சேர்ந்தேன். கரூரிலிருந்து ஈரோடு முதலிய இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு வேண்டிய கார்களுடன் சென்றிருந்தேன். நான் போய்ச்சேர்ந்த கொஞ்ச நேரத்தில் காந்தியடிகள் வந்துசேர்ந்தார். அவர் வந்துசேர்ந்ததும் நேராகத் தம் அறைக்குச் சென்றார். குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாதாரணமாக அவர் தம் வேலைகளையெல்லாம் முடித்த பிறகுதான் மற்றவர்களைப் பார்ப்பது வழக்கம். அவர் வந்தவுடனே நான் வந்து காத்துக்கொண்டிருப்பதாக அவருக்குச் செய்தி போயிற்று. அதைக் கேட்டதும் , “ உடனே அவிநாசியைக் கூப்பிடு ”  என்று சொல்லியனுப்பினார். நான் சென்றேன். சாதாரணமாக மகாத்மாஜி புன்சிரிப்புடன் எல்லோரையும் வரவேற்பார். அதோடு நகைச்சுவையும் கலந்திருக்கும். அவரைச் சென்று காண்பதே ஓர் இன்பம். அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே ஓர் உற்சாகம் உண்டாகும். ஆனால் ,  இச்சமயம் அவர் முகம் கொஞ்சம் கடுமையாக இருந்தது. சாதாரணமாக இருக்கும் புன்சிரிப்பு இல்லை. அந்த நகைச்சுவையும் காணப்படவில்லை. நான் சென்று அவர் எதிரே உட்கா

மகாத்மா காந்தியுடன் ஒருநாள் | தி. சு. அவினாசிலிங்கம்

Photo Credit: The Hindu archives மகாத்மா காந்தியை நான் முதன்முதல் 1919 ஆம் ஆண்டி ல் சந்தித்தேன். அப்போது சென்னை கலாசாலையில் முதல் வகுப்பி ல் படித்துக்கொண்டிருந்தேன். ஒத்துழையாமை சம்பந்தமாக அவர்கள் அதுசமயம் சென்னைக்கு வந்திருந்தார். அன்று மாலை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்குச் சென்று அவரைத் தரிசித்தவர்களில் நானும் ஒருவன். அடுத்த தடவை நான் அவரைச் சந்தித்தது 1927 ஆம் ஆண்டில். அப்பொழுது அவர் கதர்ப் பிரசாரத்திற்காக வந்திருந்தார். திருப்பூரை அவர் தன்னுடைய கதர் இராஜதானி என்று சொல்லிக்கொள்வது வழக்கம். திருப்பூர் எனது சொந்த ஊராகவும் இருந்தது. நான் என் சட்டப் பரீட்சை முடிந்து திருப்பூரில் தொழில் ஆரம்பித்திருந்தேன். அப்பொழுதுதான் அவரிடம் முதன்முதல் நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஹரிஜன முன்னேற்றத்திற்காக அவர் வந்தபோது கோவை , நீலகிரி ஜில்லாக்களில் அவர் சுற்றுப்பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும் பேற்றையும் பெற்றேன். அச்சுற்றுப்பிரயாணம் நிகழ்ந்து இப்பொழுது ஏறக்குறைய 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் அவருடன் கழித்த நாட்கள் இன்

க. நா. சு. மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நான் லாரா ரைடிங் காற்று வீசி வீசிக் கஷ்டப்படுகிறது. கடல்நீர் நிறைந்து அவதியுறுகிறது. நெருப்பு எரிந்து எரிந்து கஷ்டப்படுகிறது. நான் கஷ்டப்படுவதோ எனக்கு ஒரு தனிப்பெயர் ஏற்பட்டுவிட்டதனாலே தான். கல் கடினத்தினாலும் ஒளி ஒளியினாலும் பறவைகள் பறப்பதினாலும் அதுபோல நான் என் என்மையால் கஷ்டப்படுகிறேன். இதற்கு முடிவு என்ன ? மாற்று என்ன ? துயரமில்லாதிருப்பது எங்கே ? எப்படி ? இதைவிடச் சிறந்த நிலை எனக்கு எப்போது ஏது ? என்று நான் நானுக்கும் அதிகமாவது ? துயர் உலகம் அதிக உலகமாகவும் குறைந்த துயராகவும் ஆவதற்கு வழி எது ? விழும் மழை ஈரத்துடனும் ஈரமேயில்லாமலும் விழுவது எங்கே ? எந்தப் பிரதேசத்தில் ? இன்னும் அதிகம் இறந்து அதிகம் வாழ்வு தேட வேண்டும் அதிக துயரத்திலே செழுமை வாழ்வு தேட வேண்டும். நத்தை ஃபெடரிகோ கார்சியா லோர்க்கா நத்தை ஒன்று கொணர்ந்து என்னிடம் தந்தார்கள். அதற்குள்ளே பாடுகிறது. எல்லையுள்ள ஒரு கடல். என் உள்ளத்திலே நீர் நிரம்புகிறது. அதிலே நிழலும் ஒளியுமாக சிறு மீன்கள் நீந்துகின்றன. என்னிடம் நத்தை ஒன்று கொணர்ந்து தந்தார்கள்.