Skip to main content

க. நா. சு. மொழிபெயர்ப்புக் கவிதைகள்


நான்
லாரா ரைடிங்

காற்று வீசி வீசிக் கஷ்டப்படுகிறது.
கடல்நீர் நிறைந்து அவதியுறுகிறது.
நெருப்பு எரிந்து எரிந்து கஷ்டப்படுகிறது.
நான் கஷ்டப்படுவதோ எனக்கு ஒரு தனிப்பெயர் ஏற்பட்டுவிட்டதனாலே தான்.
கல் கடினத்தினாலும்
ஒளி ஒளியினாலும்
பறவைகள் பறப்பதினாலும் அதுபோல
நான் என் என்மையால் கஷ்டப்படுகிறேன்.
இதற்கு முடிவு என்ன? மாற்று என்ன?
துயரமில்லாதிருப்பது எங்கே? எப்படி?
இதைவிடச் சிறந்த நிலை எனக்கு எப்போது ஏது?
என்று நான் நானுக்கும் அதிகமாவது?
துயர் உலகம் அதிக உலகமாகவும்
குறைந்த துயராகவும் ஆவதற்கு வழி எது?
விழும் மழை ஈரத்துடனும் ஈரமேயில்லாமலும்
விழுவது எங்கே? எந்தப் பிரதேசத்தில்?
இன்னும் அதிகம் இறந்து
அதிகம் வாழ்வு தேட வேண்டும்
அதிக துயரத்திலே
செழுமை வாழ்வு தேட வேண்டும்.

நத்தை
ஃபெடரிகோ கார்சியா லோர்க்கா

நத்தை ஒன்று கொணர்ந்து
என்னிடம் தந்தார்கள்.
அதற்குள்ளே பாடுகிறது.
எல்லையுள்ள ஒரு கடல்.
என் உள்ளத்திலே
நீர் நிரம்புகிறது.
அதிலே நிழலும் ஒளியுமாக
சிறு மீன்கள் நீந்துகின்றன.
என்னிடம் நத்தை ஒன்று
கொணர்ந்து தந்தார்கள்.

மடக்கு நாற்காலிகள்
குந்தர் க்ராஸ்

இந்த மாறுதல்கள் எத்தனை துயரந்தருபவை!
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கிவிடுகிறோம்
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் - கறி சமைக்கிறோம்.

இந்த நாற்காலிகள் நிலையில்லாமல்
நகருவதையே விளம்பரப்படுத்துகின்றன.
மடக்கு நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு
ஜனங்கள் இடம் விட்டு இடம் பெயர்கின்றனர்.

வீட்டு நினைவுகளையும் வாந்தி யெடுக்கும்
மக்களையும் சுமந்து வரும் கப்பல்களில்
பேடண்ட் எடுத்த நாற்காலிகள்
பேடண்ட் பண்ணாத மனிதர்களைச் சுமக்கின்றன.

இங்கும் அங்கும் போய்ப்போய்
கடலின் இரு கரையிலும் மடக்கு நாற்காலிகள்
தோன்றிவிட்டன! மாறுதல்கள்
எத்தனை துயரம் தருவன!

பீட் கவிதை
ஆலன் கின்ஸ் பெர்க்

எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!

''எந்த ஜந்து தன்னைத்தானே பெற்றுக்கொள்கிறது?"
பிரபஞ்சமே பைத்தியக்காரத்தனமானதுதான்.
-சற்றே பைத்தியக்காரத்தனமானது தான்.

இரண்டு பக்கங்களிலும்
இரண்டு பிராக்கட்டுகளாக
நகர்ந்து சுழண்டு விழுந்துவிடும்
-விழுந்து இறந்து விடும்.

குருடான லோகத்தாலான குழாய்
ஜில்லிட்டுத் தரையில் கிடக்கிறது
தலையும் வாலும் இல்லாமல்
புல்லிலே
கால் விரல்களை
லேசாக ஆட்டுகிறது.

ஆயிரங்கால் பூச்சியின் கறுப்புத்தலை
பல அங்குலங்கள் நகர்ந்து
மச்சு பிச்சுக் கோயில் படியேறி
வால் அப்பால் கிடப்பதைக்
காண எட்டிப் பார்க்கிறது.
பிரபஞ்சத்தின் தலையும் வாலும்
மூன்றாகத் துண்டிக்கப்பட்டன.

[சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'க.நா.சு. கவிதைகள்' என்ற நூலில் உள்ள ஐந்து மொழிபெயர்ப்பு கவிதைகள் இவை. அனைத்தும் 'இலக்கிய வட்டம்' இதழில் வெளியானவை. 'வேஷம்' (31.7.64) தவிர மற்ற கவிதைகளுக்கு பிரசுர தேதி குறிப்பிடவில்லை.]

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு