Skip to main content

க. நா. சு. மொழிபெயர்ப்புக் கவிதைகள்


நான்
லாரா ரைடிங்

காற்று வீசி வீசிக் கஷ்டப்படுகிறது.
கடல்நீர் நிறைந்து அவதியுறுகிறது.
நெருப்பு எரிந்து எரிந்து கஷ்டப்படுகிறது.
நான் கஷ்டப்படுவதோ எனக்கு ஒரு தனிப்பெயர் ஏற்பட்டுவிட்டதனாலே தான்.
கல் கடினத்தினாலும்
ஒளி ஒளியினாலும்
பறவைகள் பறப்பதினாலும் அதுபோல
நான் என் என்மையால் கஷ்டப்படுகிறேன்.
இதற்கு முடிவு என்ன? மாற்று என்ன?
துயரமில்லாதிருப்பது எங்கே? எப்படி?
இதைவிடச் சிறந்த நிலை எனக்கு எப்போது ஏது?
என்று நான் நானுக்கும் அதிகமாவது?
துயர் உலகம் அதிக உலகமாகவும்
குறைந்த துயராகவும் ஆவதற்கு வழி எது?
விழும் மழை ஈரத்துடனும் ஈரமேயில்லாமலும்
விழுவது எங்கே? எந்தப் பிரதேசத்தில்?
இன்னும் அதிகம் இறந்து
அதிகம் வாழ்வு தேட வேண்டும்
அதிக துயரத்திலே
செழுமை வாழ்வு தேட வேண்டும்.

நத்தை
ஃபெடரிகோ கார்சியா லோர்க்கா

நத்தை ஒன்று கொணர்ந்து
என்னிடம் தந்தார்கள்.
அதற்குள்ளே பாடுகிறது.
எல்லையுள்ள ஒரு கடல்.
என் உள்ளத்திலே
நீர் நிரம்புகிறது.
அதிலே நிழலும் ஒளியுமாக
சிறு மீன்கள் நீந்துகின்றன.
என்னிடம் நத்தை ஒன்று
கொணர்ந்து தந்தார்கள்.

மடக்கு நாற்காலிகள்
குந்தர் க்ராஸ்

இந்த மாறுதல்கள் எத்தனை துயரந்தருபவை!
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கிவிடுகிறோம்
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் - கறி சமைக்கிறோம்.

இந்த நாற்காலிகள் நிலையில்லாமல்
நகருவதையே விளம்பரப்படுத்துகின்றன.
மடக்கு நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு
ஜனங்கள் இடம் விட்டு இடம் பெயர்கின்றனர்.

வீட்டு நினைவுகளையும் வாந்தி யெடுக்கும்
மக்களையும் சுமந்து வரும் கப்பல்களில்
பேடண்ட் எடுத்த நாற்காலிகள்
பேடண்ட் பண்ணாத மனிதர்களைச் சுமக்கின்றன.

இங்கும் அங்கும் போய்ப்போய்
கடலின் இரு கரையிலும் மடக்கு நாற்காலிகள்
தோன்றிவிட்டன! மாறுதல்கள்
எத்தனை துயரம் தருவன!

பீட் கவிதை
ஆலன் கின்ஸ் பெர்க்

எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!

''எந்த ஜந்து தன்னைத்தானே பெற்றுக்கொள்கிறது?"
பிரபஞ்சமே பைத்தியக்காரத்தனமானதுதான்.
-சற்றே பைத்தியக்காரத்தனமானது தான்.

இரண்டு பக்கங்களிலும்
இரண்டு பிராக்கட்டுகளாக
நகர்ந்து சுழண்டு விழுந்துவிடும்
-விழுந்து இறந்து விடும்.

குருடான லோகத்தாலான குழாய்
ஜில்லிட்டுத் தரையில் கிடக்கிறது
தலையும் வாலும் இல்லாமல்
புல்லிலே
கால் விரல்களை
லேசாக ஆட்டுகிறது.

ஆயிரங்கால் பூச்சியின் கறுப்புத்தலை
பல அங்குலங்கள் நகர்ந்து
மச்சு பிச்சுக் கோயில் படியேறி
வால் அப்பால் கிடப்பதைக்
காண எட்டிப் பார்க்கிறது.
பிரபஞ்சத்தின் தலையும் வாலும்
மூன்றாகத் துண்டிக்கப்பட்டன.

[சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'க.நா.சு. கவிதைகள்' என்ற நூலில் உள்ள ஐந்து மொழிபெயர்ப்பு கவிதைகள் இவை. அனைத்தும் 'இலக்கிய வட்டம்' இதழில் வெளியானவை. 'வேஷம்' (31.7.64) தவிர மற்ற கவிதைகளுக்கு பிரசுர தேதி குறிப்பிடவில்லை.]

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...