Skip to main content

க. நா. சு. மொழிபெயர்ப்புக் கவிதைகள்


நான்
லாரா ரைடிங்

காற்று வீசி வீசிக் கஷ்டப்படுகிறது.
கடல்நீர் நிறைந்து அவதியுறுகிறது.
நெருப்பு எரிந்து எரிந்து கஷ்டப்படுகிறது.
நான் கஷ்டப்படுவதோ எனக்கு ஒரு தனிப்பெயர் ஏற்பட்டுவிட்டதனாலே தான்.
கல் கடினத்தினாலும்
ஒளி ஒளியினாலும்
பறவைகள் பறப்பதினாலும் அதுபோல
நான் என் என்மையால் கஷ்டப்படுகிறேன்.
இதற்கு முடிவு என்ன? மாற்று என்ன?
துயரமில்லாதிருப்பது எங்கே? எப்படி?
இதைவிடச் சிறந்த நிலை எனக்கு எப்போது ஏது?
என்று நான் நானுக்கும் அதிகமாவது?
துயர் உலகம் அதிக உலகமாகவும்
குறைந்த துயராகவும் ஆவதற்கு வழி எது?
விழும் மழை ஈரத்துடனும் ஈரமேயில்லாமலும்
விழுவது எங்கே? எந்தப் பிரதேசத்தில்?
இன்னும் அதிகம் இறந்து
அதிகம் வாழ்வு தேட வேண்டும்
அதிக துயரத்திலே
செழுமை வாழ்வு தேட வேண்டும்.

நத்தை
ஃபெடரிகோ கார்சியா லோர்க்கா

நத்தை ஒன்று கொணர்ந்து
என்னிடம் தந்தார்கள்.
அதற்குள்ளே பாடுகிறது.
எல்லையுள்ள ஒரு கடல்.
என் உள்ளத்திலே
நீர் நிரம்புகிறது.
அதிலே நிழலும் ஒளியுமாக
சிறு மீன்கள் நீந்துகின்றன.
என்னிடம் நத்தை ஒன்று
கொணர்ந்து தந்தார்கள்.

மடக்கு நாற்காலிகள்
குந்தர் க்ராஸ்

இந்த மாறுதல்கள் எத்தனை துயரந்தருபவை!
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கிவிடுகிறோம்
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் - கறி சமைக்கிறோம்.

இந்த நாற்காலிகள் நிலையில்லாமல்
நகருவதையே விளம்பரப்படுத்துகின்றன.
மடக்கு நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு
ஜனங்கள் இடம் விட்டு இடம் பெயர்கின்றனர்.

வீட்டு நினைவுகளையும் வாந்தி யெடுக்கும்
மக்களையும் சுமந்து வரும் கப்பல்களில்
பேடண்ட் எடுத்த நாற்காலிகள்
பேடண்ட் பண்ணாத மனிதர்களைச் சுமக்கின்றன.

இங்கும் அங்கும் போய்ப்போய்
கடலின் இரு கரையிலும் மடக்கு நாற்காலிகள்
தோன்றிவிட்டன! மாறுதல்கள்
எத்தனை துயரம் தருவன!

பீட் கவிதை
ஆலன் கின்ஸ் பெர்க்

எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!

''எந்த ஜந்து தன்னைத்தானே பெற்றுக்கொள்கிறது?"
பிரபஞ்சமே பைத்தியக்காரத்தனமானதுதான்.
-சற்றே பைத்தியக்காரத்தனமானது தான்.

இரண்டு பக்கங்களிலும்
இரண்டு பிராக்கட்டுகளாக
நகர்ந்து சுழண்டு விழுந்துவிடும்
-விழுந்து இறந்து விடும்.

குருடான லோகத்தாலான குழாய்
ஜில்லிட்டுத் தரையில் கிடக்கிறது
தலையும் வாலும் இல்லாமல்
புல்லிலே
கால் விரல்களை
லேசாக ஆட்டுகிறது.

ஆயிரங்கால் பூச்சியின் கறுப்புத்தலை
பல அங்குலங்கள் நகர்ந்து
மச்சு பிச்சுக் கோயில் படியேறி
வால் அப்பால் கிடப்பதைக்
காண எட்டிப் பார்க்கிறது.
பிரபஞ்சத்தின் தலையும் வாலும்
மூன்றாகத் துண்டிக்கப்பட்டன.

[சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'க.நா.சு. கவிதைகள்' என்ற நூலில் உள்ள ஐந்து மொழிபெயர்ப்பு கவிதைகள் இவை. அனைத்தும் 'இலக்கிய வட்டம்' இதழில் வெளியானவை. 'வேஷம்' (31.7.64) தவிர மற்ற கவிதைகளுக்கு பிரசுர தேதி குறிப்பிடவில்லை.]

Comments

Most Popular

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

பல ரூபங்களில் காந்தி: செருப்புத் தைப்பவர் | அனு பந்தோபாத்யாயா

தனது 63 வது வயதில் காந்திஜி வல்லபாய் பட்டேலுடன் எரவாடா சிறையில் இருந்தார். பட்டேலுக்கு ஒரு ஜோடி புதிய செருப்பு தேவைப்பட்டது. ஆனால் , அத்தருணத்தில் சிறையில் செருப்பு தைப்பவர் யாரும் இல்லை. காந்திஜி சொன்னார்: '' எனக்கு நல்ல தோல் கிடைத்தால் நானே உங்களுக்கு செருப்பு தைத்துக் கொடுத்துவிடுவேன். வெகு காலத்திற்கு முன் கற்றுக்கொண்ட அத்தொழில் எனக்கு இன்னமும் நினைவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நான் ஒரு நல்ல செருப்புத் தைப்பவனாக இருந்தேன். சோட்பூரில் உள்ள கதர் ஆசிரமத்தின் மியூசியத்தில் நான் தைத்த செருப்புகளைக் காணலாம். நான் அந்த ஜோடி செருப்புகளை யாருக்காகவோ அனுப்பினேன். அந்த நபர் தன்னால் அச்செருப்புகளை அணிய முடியாது என்றும் , ஒரு அழகுப் பொருளாகத்தான் வைத்துக்கொள்ள முடியும் என்றும் சொல்லிவிட்டார். டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோது நான் நிறைய செருப்புகளைத் தைத்திருக்கிறேன். '' 1911 ம் ஆண்டு தனது உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் '' நான் இச்சமயம் எல்லா நேரங்களிலும் செருப்பு தைப்பதில் ஈடுபட்டுள்ளேன். நான் இவ்வேலையை முக்கியமானது என்று கருதுகிறேன். மேலும் எனக்கு இந...