Skip to main content

Posts

Showing posts from August, 2019

பசுப் பாதுகாப்பைப் பற்றி | மகாத்மா காந்தி

வாசகர்: பசுப் பாதுகாப்பைப்பற்றி இப்பொழுது உங்கள் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஆசிரியர்: நானே பசுவுக்கு மரியாதை செலுத்துகிறேன். அதாவது, அதனிடம் அன்பு கலந்த ஒரு மதிப்பு வைத்திருக்கிறேன். இந்தியாவைப் பாதுகாப்பது பசு. ஏனெனில், இந்திய நாடு விவசாய நாடாக இருப்பதால் அது பசுவை நம்பி வாழ வேண்டியிருக்கிறது. நூற்றுக்கணக்கான வழிகளில் பசு மிகவும் பயன் அளிக்கும் மிருகம். நம் முஸ்லிம் சகோதரர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால், நான் பசுவுக்கு மதிப்பளிப்பதைப் போலவே என் நாட்டிலுள்ள சகோதரர்களுக்கும் மதிப்பளிக்கிறேன். ஒருவர் ஹிந்துவானாலும் சரி, முஸ்லிமாகயிருந்தாலும் சரி, பசுவைப் போன்றே மனிதரும் பயன் உள்ளவரே. அப்படி இருக்கும்போது ஒரு பசுவைப் பாதுகாப்பதற்காக ஒரு முஸ்லிமுடன் சண்டையிடுவதோ அல்லது அவரைக் கொல்வதோ சரியா? அப்படிச் செய்வதனால் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு பசுவுக்கும் விரோதியாவேன். ஆகையால், பசுவைப் பாதுகாப்பதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி, நாட்டின் நன்மையை முன்னிட்டு அதைப் பாதுகாப்பதற்கு என்னுடன் ஒத்துழைக்கும்படி என் முஸ்லிம் சகோதரர்களைக் கேட்டுக்கொள்வதேயாகும். நான் கூறுவதற்கு அவர் இணங்

வாழ்க நீ எம்மான்! | நரசய்யா

என்னுடைய வருடாந்திர விடுமுறை முடிந்து , பம்பாய்க்கு மெட்ராஸ் - பாம்பே மெயிலில் புறப்பட்டேன். 1960ஆம் வருடத்து செப்டம்பர் மாதம் , ஐ.என்.எஸ். விக்ராந்துக்குச் செல்வதற்கு பம்பாய் வரச்சொல்லி ஆர்டர் தந்தி மூலம் வந்திருந்தது. இரவு பத்தரை மணிக்குப் புறப்படும் மெயில் , அன்று சற்று தாமதமாகவே புறப்பட்டது. முதல் வகுப்பு ; அதிலும் அந்தக் காலத்து கம்பார்ட்மெண்ட் ; ஆறு பெர்த்துகள் கொண்டது. என்னைத் தவிர மற்றொரு பிரயாணி பெயர் இருந்தது. அவரும் இதுவரை வரவில்லை . டிக்கட் பரிசோதகர் மற்றொரு முறை அவர் , அதாவது , இரண்டாவது பிரயாணி வந்தாரா என்று கேட்டுவிட்டுச் சென்றார். வண்டிக் கிளம்பச் சரியாக இரண்டு நிமிடங்களே இருந்தபோது வேகமாக வந்து ஏறிக்கொண்ட நபர் உயரமாக நல்ல உடற்கட்டுடன் இருந்தார். நடை யாரையோ நினைவூட்டியது. கதர் உடைகளில் இருந்த அம்மனிதரை எங்கோ முன்பே சந்தித்தது போல எனக்கு ஒரு பிரமை! வண்டி கிளம்பினபோதுதான் பார்த்தேன். நெற்றியில் ஒரே கோடாகக் காட்சியளித்த நாமமும் சிவந்த மேனியும் அடையாளம் காட்டிவிட்டன! "டேய் , வாசுவாடா ?'. சரியாக பதினான்கு வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன்! அரியலூரில் எ

அமேசானில் ஆகஸ்ட் மாத சலுகை 2019

சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு | மிஷல் தனினோ | ₹100 https://amzn.to/2GH0tTX இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு... (பாகம் 1) | ராமச்சந்திர குஹா | ₹100 http://bit.ly/IndiaAfterGandhi1 வாழ்ந்து போதீரே | இரா. முருகன் | ₹100 http://bit.ly/VaazhnduPothire தியூப்ளே வீதி | இரா. முருகன் | ₹100 http://bit.ly/DupleixVeedhi வெள்ளையானை | ஜெயமோகன் | ₹80 http://bit.ly/VellaiYaanai அகதிகள் | மருதன் | ₹50 http://bit.ly/Agathigal-Marudhan சதுரங்கக் குதிரை | நாஞ்சில் நாடன் | ₹50 http://bit.ly/SathurangaKuthirai அன்பும் அறமும் | சரவணன் சந்திரன் | ₹40 http://bit.ly/AnbumAramum கலாதீபம் லொட்ஜ் | வாசு முருகவேல் | ₹40 http://bit.ly/KalaadeepamLodge ராமானுஜர் | இந்திரா பார்த்தசாரதி |₹30 http://bit.ly/Ramanujar-eepaa கொங்குதேர் வாழ்க்கை | நாஞ்சில் நாடன் | ₹20 http://bit.ly/KongutherVazhkai