Skip to main content

முதல் சிறைவாசம் | தி. ஜ. ரங்கநாதன்

காந்தி எப்போதும் அநீதியை எதிர்த்தார். அதனால் பல முறை சிறை புகுந்தார். தென் ஆப்பிரிக்காவில்தான் அவரது முதல் சிறைவாசம்; அப்புறம் இந்தியாவில். இங்கே முதல் முறை ஆறாண்டு சிறைத்தண்டனை பெற்றார். எரவாடா சிறையில் அவரை வைத்தார்கள்.
சிறை அதிகாரி அவரிடம் முரட்டுத்தனமாய் நடந்தார். இடுப்புத்துணிதான் காந்தி உடுத்திருந்தார். ஆனால், அவரைத் தினமும் அதிகாரி சோதிப்பார். அவருடைய இடுப்பைத் தடவிப் பார்ப்பார்; கம்பளிகளை உதறுவார்; மலஜலப் பானையைப் பூட்ஸால் உதைப்பார்.
இவற்றையெல்லாம் பார்த்துக் காந்தி வருத்தப்பட்டார். அதிகாரியோடு வாதித்தார். "இவையெல்லாம் நியாயம் இல்லை" என்றார். நயமாகவே எடுத்துரைத்தார்.
அதிகாரி சிறிது மனம் மாறினார். காந்தியைக் கொஞ்சம் மரியாதையாக நடத்தினார். மற்ற கைதிகளும் சற்று வசதி பெற்றார்கள்.
சிறை கட்டுப்பாடுகளை காந்தி ஒருபோதும் மீறமாட்டார். அவற்றுக்குத் தாமாக உட்படுவார்.
முதல் முதல் ராஜாஜி, காந்தியின் முதல்வர் தேவதாஸ் - இந்த இருவரும் காந்தியைப் பேட்டி கண்டார்கள்.
சிறை அதிகாரியும் கூடவே இருந்தார். அவர் காந்திக்கு ஆசனம் அளிக்கவில்லை. காந்தி நின்றுகொண்டே பேசினார். தேவதாஸுக்கு இது வருத்தமாக இருந்தது.
காந்தி சொன்னார்: "மகனே! சிறையை ஒழிப்பதா நம் நோக்கம்? இல்லையே! சுயராஜ்ஜியம் நமக்கு வரும். அப்போது நாமே சிறையை நடத்த வேண்டியிருக்கும். குற்றவாளிகளை அதில் அடைப்போம். அவர்களைச் சீர்திருத்துவோம்; ஒழுங்காக இருக்கச் செய்யவோம். ஒழுங்கீனம் கூடாது; கட்டுப்பாட்டை மீறலாகாது. பண்பாடு உள்ள மக்களுக்கு அதுதான் அழகு. நாம் அநீதியான சட்டங்களையே மீறுகிறோம். அதற்குக் கிடைக்கும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். கஷ்டங்களை அனுபவிப்போம். நியாயமான சட்டங்களை மீறமாட்டோம். இதுதான் சத்தியாக்கிரகம்.''

அடுத்தக் கதை: அறுவை சிகிச்சை

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (...