Skip to main content

முதல் சிறைவாசம் | தி. ஜ. ரங்கநாதன்

காந்தி எப்போதும் அநீதியை எதிர்த்தார். அதனால் பல முறை சிறை புகுந்தார். தென் ஆப்பிரிக்காவில்தான் அவரது முதல் சிறைவாசம்; அப்புறம் இந்தியாவில். இங்கே முதல் முறை ஆறாண்டு சிறைத்தண்டனை பெற்றார். எரவாடா சிறையில் அவரை வைத்தார்கள்.
சிறை அதிகாரி அவரிடம் முரட்டுத்தனமாய் நடந்தார். இடுப்புத்துணிதான் காந்தி உடுத்திருந்தார். ஆனால், அவரைத் தினமும் அதிகாரி சோதிப்பார். அவருடைய இடுப்பைத் தடவிப் பார்ப்பார்; கம்பளிகளை உதறுவார்; மலஜலப் பானையைப் பூட்ஸால் உதைப்பார்.
இவற்றையெல்லாம் பார்த்துக் காந்தி வருத்தப்பட்டார். அதிகாரியோடு வாதித்தார். "இவையெல்லாம் நியாயம் இல்லை" என்றார். நயமாகவே எடுத்துரைத்தார்.
அதிகாரி சிறிது மனம் மாறினார். காந்தியைக் கொஞ்சம் மரியாதையாக நடத்தினார். மற்ற கைதிகளும் சற்று வசதி பெற்றார்கள்.
சிறை கட்டுப்பாடுகளை காந்தி ஒருபோதும் மீறமாட்டார். அவற்றுக்குத் தாமாக உட்படுவார்.
முதல் முதல் ராஜாஜி, காந்தியின் முதல்வர் தேவதாஸ் - இந்த இருவரும் காந்தியைப் பேட்டி கண்டார்கள்.
சிறை அதிகாரியும் கூடவே இருந்தார். அவர் காந்திக்கு ஆசனம் அளிக்கவில்லை. காந்தி நின்றுகொண்டே பேசினார். தேவதாஸுக்கு இது வருத்தமாக இருந்தது.
காந்தி சொன்னார்: "மகனே! சிறையை ஒழிப்பதா நம் நோக்கம்? இல்லையே! சுயராஜ்ஜியம் நமக்கு வரும். அப்போது நாமே சிறையை நடத்த வேண்டியிருக்கும். குற்றவாளிகளை அதில் அடைப்போம். அவர்களைச் சீர்திருத்துவோம்; ஒழுங்காக இருக்கச் செய்யவோம். ஒழுங்கீனம் கூடாது; கட்டுப்பாட்டை மீறலாகாது. பண்பாடு உள்ள மக்களுக்கு அதுதான் அழகு. நாம் அநீதியான சட்டங்களையே மீறுகிறோம். அதற்குக் கிடைக்கும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். கஷ்டங்களை அனுபவிப்போம். நியாயமான சட்டங்களை மீறமாட்டோம். இதுதான் சத்தியாக்கிரகம்.''

அடுத்தக் கதை: அறுவை சிகிச்சை

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...