Skip to main content

கோயில் சிலை | தி. ஜ. ரங்கநாதன்

'அரிச்சந்திரன் உண்மையே பேசுவான்; ஒரே ஒரு பொய்கூடச் சொல்ல மறுத்தான். அதனால் நாட்டை இழந்தான்; மனைவியைப் பிரிந்தான்; மகனை இழந்தான்; துன்பங்களை அனுபவித்தான். அவனைப் போலவே ஏன் எல்லாரும் உண்மையே பேசக்கூடாது?' இப்படி எண்ணினார், காந்தி. அப்போது அவர் சிறு பையன்.
இரவும் பகலும் அவர் அரிச்சந்திரனைப்பற்றியே நினைத்தார். 'அரிச்சந்திரனைப் போலவே நான் நடப்பேன்' என்று உறுதி கொண்டார்.
காந்திக்குப் பல தோழர்கள் உண்டு. எல்லாரும் களிமண் பொம்மை செய்வார்கள். அதைச் 'சுவாமி' என்று சொல்லுவார்கள். அந்தச் சுவாமிக்கு ஊர்வலம் நடத்துவார்கள்.
ஒருநாள் அவர்களுக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. "இந்த மண் பொம்மை வேண்டாம். கோயிலுக்கு போவோம். அங்கே சுவாமி சிலை இருக்கிறது அல்லவா? அதை எடுத்து வருவோம். அலங்காரம் செய்வோம். ஊர்வலம் நடத்துவோம். அது மிகவும் நன்றாய் இருக்கும். அல்லவா?" என்றான் ஒரு தோழன்.
"சரியான யோசனை!" என்றார்கள், மற்றவர்கள்.
கோயிலுக்கு யார் போவது? சிலையை யார் கொண்டுவருவது? எல்லாரையும் விட சிறியவன் சாந்து. அவனை அனுப்பினார்கள்.
உச்சி நேரம். பூசாரி ஒரு சிறு தூக்கம் போட்டுக்கொண்டிருந்தார். அதுதான் சரியான சமயம். கருவறையிலே சாந்து நுழைந்தான். அங்கு சில சிலைகள் இருந்தன. அவற்றைச் சாந்து எடுத்தான். 'கிண்கிண்' என்று ஓசை உண்டாயிற்று.
வெளியே பூசாரியின் மனைவி இருந்தாள். அவளுக்கு இந்த ஓசை கேட்டது.
"ஐயோ, திருடன்! திருடன்!" என்று அவள் கத்தினாள்.
பூசாரி விழித்துக்கொண்டார்; ஓடி வந்தார்.
சாந்துவின் கைகளில் சிலைகள் இருந்தன. சிலைகளோடு அவன் ஓடினான். பூசாரி துரத்தினார். அவன் ஓட, இவர் துரத்த ஒரே அமளிதான்.
வாயிலில் காந்தியும் மற்றச் சிறுவர்களும் இருந்தார்கள். அவர்கள் இதைக் கண்டார்கள்; ஓட்டம் பிடித்தார்கள்; ஆளுக்கு ஒரு திசையில் மறைந்தார்கள்.
வழியிலே இன்னொரு கோயில் இருந்தது. அக்கோயிலுக்குள் சாந்து நுழைந்தான். பிராகாரத்தில் சற்று நின்றான். சிலைகளை அப்படியே வைத்தான். ஓடி மறைந்தான்.
இதைப் பூசாரி பார்க்கவில்லை. அவர் காந்தியின் வீட்டுக்கு ஓடினார். காந்தியின் பங்காளிதான் சாந்து. சாந்துவின் சந்தையைப் பூசாரி கண்டார்; நடந்ததைச் சொன்னார். "சிலைகளை வாங்கிக்கொடுங்கள். இல்லாவிட்டால், நான் இங்கிருந்து நகரமாட்டேன்" என்றார்.
சிந்துவின். தந்தை கோபக்காரர்; தவிர, தெய்வத்திடம் பக்தி உள்ளவர். சாந்துவை விசாரித்தார்; பிற பையன்களையும் விசாரித்தார். காந்தி மட்டும் அங்கு இல்லை. அப்பொழுது அவர் எங்கோ போயிருந்தார்.
கடுமையான விசாரணை நடந்தது. பையன்கள் நடுங்கினார்கள். உண்மையை எவனும் சொல்லத் துணியவில்லை.
சாந்துவின் அண்ணன் சொன்னார்: "நாங்கள் கோயிலுக்குப் போனோம்; அங்கே விளையாடினோம். இது உண்மை. ஆனால், சிலைகளை நாங்கள் தொடவில்லை; யார் எடுத்தார்களோ? எங்களுக்குத் தெரியவே தெரியாது.''
கடைசியில் காந்தி அங்கு வந்து சேர்ந்தார். காந்திக்கு 'மோனியா' என்று செல்லப்பெயர் உண்டு.
"மோனியா! நீ சொல். நடந்தது என்ன?" என்றார், சாந்துவின் தந்தை.
அடி விழுமே என்று காந்தி பயப்படவில்லை.
"சிலைகளைச் சாந்து எடுத்தது உண்மைதான்" என்றார். நடந்ததை நடந்தபடி சொன்னார்.
இதனால் பிற பையன்கள் கோபம் கொண்டார்களா? அதுதான் இல்லை. 'காந்தி நம்மைப் போல் அல்ல; அவன் உயர்ந்தவன்' என்று அவரை மதித்தார்கள். அவர்களுக்குள் ஏதாவது சண்டை வரும். அதைத் தீர்த்துவைக்க காந்தியையே அழைப்பார்கள். காந்தி சொல்லும் முடிவை அப்படியே ஏற்பார்கள்; அதன்படி நடப்பார்கள். காந்தி வேறு என்ன தவறு செய்தாலும் சரி; பொய் மட்டும் சொல்லவே மாட்டார். என்ன துன்பம் வந்தாலும் சரி; உண்மையே சொல்வார். சிறு வயது முதல் இந்த உறுதியோடு அவர் நடந்தார். தம் ஆயுளில் அவர் இந்த உறுதியிலிருந்து ஒருபொழுதும் மாறவே இல்லை.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர