காந்திஜி ஒரு தடவை சொன்னார் "நான் ஒரு பணியா. என்னுடைய பேராசைக்கு அளவே கிடையாது". அவர் ஒரு வியாபாரி குடும்பத்தில் பிறந்தவர். தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி சுதேச சமஸ்தானம் ஒன்றில் திவானாகப் பணி செய்வதற்கு குடும்பத்துப் பெரியவர்கள் அவரைத் தயார் செய்தனர் , காந்திஜியோ திவான் பதவிக்குச் செல்லாமல் பரதேசி கோலம் பூண்டுவிட்டார். இருப்பினும் அவருடைய ரத்தத்தில் வியாபாரத் தந்திரம் ஊறி இருந்தது. எப்போதுமே , அவர் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வந்தார். குறைந்த விலையில் தரமான பொருள்களை வாங்குவது அவருக்குக் கைவந்த கலை. பிற்பாடு , அவர் ஆடம்பரப் பொருள்கள் அனைத்தையும் துறந்துவிட்டார். கதர் அரையாடையும் மேலே போர்த்திக் கொள்வதற்கு ஒரு சால்வையுமே அவருடைய உடைகள். கையினால் தயாரிக்கப்பட்ட செருப்பைத்தான் அவர் அணிவார். பல அயிட்டங்கள் நிறைந்த சாப்பாட்டை அவர் சாப்பிடுவதில்லை. ஒன்றிரண்டு சப்பாத்திகள் , சாதம் , வேகவைக்கப்பட்ட காய்கள் , பச்சை இலைகள் , ஆட்டுப்பால் , வெல்லம் மற்றும் தேன் தான் அவர் ஏற்றுக்கொண்ட உணவுப் பொருள்களின் மொத்தப் பட்டியல். இப்பட்டியலிலிருந்து நாள் ஒன்றுக்கு ஐந்து அயிட்டங்களுக்கு ம...
Comments
Post a Comment