Skip to main content

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்

ழிசி மின்புத்தக வெளியீட்டகம் இலக்கிய விமர்சனப் போக்கை வளர்த்தெடுக்கும் வகையில் கடந்த மாதம் ஒரு போட்டியை அறிவித்திருந்தது. அமேசான் தளத்தில் வலையேற்றப்படும்  பொதுத்தள நூல்களிலிருந்து கிடைக்கும் வருவாயை வாசகர்களுக்கே திருப்பியளிக்க அழிசி விழைந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற இப்போட்டியில் மொத்தம் 24 கட்டுரைகள் வந்தன. 2 கட்டுரைகள் காலதமாதம் காரணமாக போட்டிக்கு பரிசீலிக்கவில்லை. 2 கட்டுரைகள் தமிழ் அல்லாது வேற்று மொழி நாவல் மற்றும் மொழியாக்க நாவல் குறித்தான விமர்சன கட்டுரையாக இருந்ததால் அவையும் பரிசீலிக்கப்படவில்லை. எனினும் விதிவிலக்காக ரமேஷ் கல்யாண் அவர்கள் எழுதிய 'When the river sleeps' எனும் ஆங்கில நாவலைப் பற்றிய கட்டுரை மிகச் சிறந்தது என்பதில் நடுவர் குழுவிற்கு ஒருமித்த கருத்து இருந்தது. ஆகவே அவ்வகையில் ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு அறிவிக்கப்படாத ஒரு சிறப்பு பரிசை நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அழிசி அளிக்கிறது.

வந்திருந்த கட்டுரைகளில் பொதுவாக விமர்சன நோக்கு என்பது மிகக் குறைவாகவே புலப்பட்டது. வெவ்வேறு வகையான வாசிப்புகளே பெரும்பாலும் விமர்சனத்தின் பேரால் முன்வைக்கப்பட்டன. விமர்சன நோக்கு என்பதன் பொருள் ஆசிரியரையோ ஆக்கத்தையோ பூரணமாக நிராகரித்து தூற்றுவதும் அல்ல. தேர்ந்த விமர்சன கட்டுரை என்பது ஒரு படைப்பின் தனித்தன்மை என்ன? பேசுபொருள் என்ன? தவறவிட்டவை எவை? தமிழ் இலக்கிய வெளியில் அதன் இடம் என்ன? எந்த ஆக்கங்களுடன் ஒப்பிடத்தக்கது? ஆசிரியரின் முந்தைய ஆக்கங்களுடன் உள்ள தொடர்ச்சி என்ன? என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். புத்தக அறிமுகம் அல்லது வாசிப்பு என்ற நிலையில் கட்டுரைகள் நின்றுவிட்டன. எனினும் அவ்வகையில் சிறந்த வாசிப்புக் கோணங்களை முன்வைத்த கட்டுரைகள் பலவும் வாசிக்கக் கிடைத்தன. பரீசீலனைக்கு உட்பட்ட 20 கட்டுரைகளில் இருந்து பத்து கட்டுரைகளை கொண்ட நீள் பட்டியல் இடப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. வெள்ளையானை - சிவ மணியன்
3. நிழலின் தனிமை- ஜெயன் கோபாலகிருஷ்ணன்
4. கொற்றவை- கமல தேவி
5. மெனிஞ்சியோமா - அழகுநிலா
6. வெள்ளை யானை - ஜினுராஜ்
7. இமைக்கணம்- அகிலன்
8. நிழலின் தனிமை - கமலக்கண்ணன்
9. யாமம் - மகேந்திரன்
10. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

இந்த பத்து கட்டுரைகளும் பதாகை இணைய இதழில் அதன் ஆசிரியர்களின் விருப்பின் பேரில் பிரசுரிக்கப்படும். விவாதத்தின் ஊடாக இதிலிருந்து ஐந்து கட்டுரைகள் கொண்ட குறும்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. நிழலின் தனிமை - ஜெயன் கோபாலகிருஷ்ணன்
3. வெள்ளை யானை - சிவ மணியன்
4. யாமம் - மகேந்திரன்
5. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

தீவிர பரீசீலனைக்கு பின் ஐந்து நடுவர்களில் நால்வர் ரஞ்சனி பாசு எழுதிய காவல் கோட்டம் பற்றிய விமர்சனத்தை பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்தார்கள். எழுத்தாளர் தூயன் சரளா முருகையன் அவர்களின் ஆப்பிளுக்கு முன் பற்றிய விமர்சன கட்டுரையை தேர்வு செய்தார். பெரும்பான்மையினரின் முடிவையொட்டி, போட்டிக்கு வந்ததிலேயே சிறந்த கட்டுரையாக ரஞ்சனி பாசு அவர்களின் காவல் கோட்டம் பற்றிய விமர்சனம் தேர்வு செய்யப்படுகிறது. விமர்சன நோக்கு குறைவாக வெளிப்பட்டாலும், மதுரையின் வரலாற்றுடன் நாவலை இணை வைத்து வாசிக்கும் செறிவான கட்டுரை.

பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. போட்டியை வழிநடத்தி முடிவு அறிவுப்பு வரை துணை நின்ற சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், தூயன், ரியாஸ், மதியழகன் அடங்கிய நடுவர் குழுவுக்கு நன்றி. இப்போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள் இணையதளங்களில் வெளியிட்டு உதவிய எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி. கிண்டில் பரிசு பெறும் ரஞ்சனி பாசு மற்றும் சிறப்பு பரிசு பெறும் ரமேஷ் கல்யாண் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

அழிசி

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (