Skip to main content

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்

ழிசி மின்புத்தக வெளியீட்டகம் இலக்கிய விமர்சனப் போக்கை வளர்த்தெடுக்கும் வகையில் கடந்த மாதம் ஒரு போட்டியை அறிவித்திருந்தது. அமேசான் தளத்தில் வலையேற்றப்படும்  பொதுத்தள நூல்களிலிருந்து கிடைக்கும் வருவாயை வாசகர்களுக்கே திருப்பியளிக்க அழிசி விழைந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற இப்போட்டியில் மொத்தம் 24 கட்டுரைகள் வந்தன. 2 கட்டுரைகள் காலதமாதம் காரணமாக போட்டிக்கு பரிசீலிக்கவில்லை. 2 கட்டுரைகள் தமிழ் அல்லாது வேற்று மொழி நாவல் மற்றும் மொழியாக்க நாவல் குறித்தான விமர்சன கட்டுரையாக இருந்ததால் அவையும் பரிசீலிக்கப்படவில்லை. எனினும் விதிவிலக்காக ரமேஷ் கல்யாண் அவர்கள் எழுதிய 'When the river sleeps' எனும் ஆங்கில நாவலைப் பற்றிய கட்டுரை மிகச் சிறந்தது என்பதில் நடுவர் குழுவிற்கு ஒருமித்த கருத்து இருந்தது. ஆகவே அவ்வகையில் ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு அறிவிக்கப்படாத ஒரு சிறப்பு பரிசை நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அழிசி அளிக்கிறது.

வந்திருந்த கட்டுரைகளில் பொதுவாக விமர்சன நோக்கு என்பது மிகக் குறைவாகவே புலப்பட்டது. வெவ்வேறு வகையான வாசிப்புகளே பெரும்பாலும் விமர்சனத்தின் பேரால் முன்வைக்கப்பட்டன. விமர்சன நோக்கு என்பதன் பொருள் ஆசிரியரையோ ஆக்கத்தையோ பூரணமாக நிராகரித்து தூற்றுவதும் அல்ல. தேர்ந்த விமர்சன கட்டுரை என்பது ஒரு படைப்பின் தனித்தன்மை என்ன? பேசுபொருள் என்ன? தவறவிட்டவை எவை? தமிழ் இலக்கிய வெளியில் அதன் இடம் என்ன? எந்த ஆக்கங்களுடன் ஒப்பிடத்தக்கது? ஆசிரியரின் முந்தைய ஆக்கங்களுடன் உள்ள தொடர்ச்சி என்ன? என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். புத்தக அறிமுகம் அல்லது வாசிப்பு என்ற நிலையில் கட்டுரைகள் நின்றுவிட்டன. எனினும் அவ்வகையில் சிறந்த வாசிப்புக் கோணங்களை முன்வைத்த கட்டுரைகள் பலவும் வாசிக்கக் கிடைத்தன. பரீசீலனைக்கு உட்பட்ட 20 கட்டுரைகளில் இருந்து பத்து கட்டுரைகளை கொண்ட நீள் பட்டியல் இடப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. வெள்ளையானை - சிவ மணியன்
3. நிழலின் தனிமை- ஜெயன் கோபாலகிருஷ்ணன்
4. கொற்றவை- கமல தேவி
5. மெனிஞ்சியோமா - அழகுநிலா
6. வெள்ளை யானை - ஜினுராஜ்
7. இமைக்கணம்- அகிலன்
8. நிழலின் தனிமை - கமலக்கண்ணன்
9. யாமம் - மகேந்திரன்
10. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

இந்த பத்து கட்டுரைகளும் பதாகை இணைய இதழில் அதன் ஆசிரியர்களின் விருப்பின் பேரில் பிரசுரிக்கப்படும். விவாதத்தின் ஊடாக இதிலிருந்து ஐந்து கட்டுரைகள் கொண்ட குறும்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. நிழலின் தனிமை - ஜெயன் கோபாலகிருஷ்ணன்
3. வெள்ளை யானை - சிவ மணியன்
4. யாமம் - மகேந்திரன்
5. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

தீவிர பரீசீலனைக்கு பின் ஐந்து நடுவர்களில் நால்வர் ரஞ்சனி பாசு எழுதிய காவல் கோட்டம் பற்றிய விமர்சனத்தை பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்தார்கள். எழுத்தாளர் தூயன் சரளா முருகையன் அவர்களின் ஆப்பிளுக்கு முன் பற்றிய விமர்சன கட்டுரையை தேர்வு செய்தார். பெரும்பான்மையினரின் முடிவையொட்டி, போட்டிக்கு வந்ததிலேயே சிறந்த கட்டுரையாக ரஞ்சனி பாசு அவர்களின் காவல் கோட்டம் பற்றிய விமர்சனம் தேர்வு செய்யப்படுகிறது. விமர்சன நோக்கு குறைவாக வெளிப்பட்டாலும், மதுரையின் வரலாற்றுடன் நாவலை இணை வைத்து வாசிக்கும் செறிவான கட்டுரை.

பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. போட்டியை வழிநடத்தி முடிவு அறிவுப்பு வரை துணை நின்ற சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், தூயன், ரியாஸ், மதியழகன் அடங்கிய நடுவர் குழுவுக்கு நன்றி. இப்போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள் இணையதளங்களில் வெளியிட்டு உதவிய எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி. கிண்டில் பரிசு பெறும் ரஞ்சனி பாசு மற்றும் சிறப்பு பரிசு பெறும் ரமேஷ் கல்யாண் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

அழிசி

Comments

Most Popular

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...