![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiutHpP15KIhQdwMkXviBLXjPQCHQ5m2Alk7x4tRF_zu3Ljghyphenhyphene5HYAtn1AnvLXn_XdPX1dtGxYzv5HsRTT2FCumA4Q0Xpso8sTanJiZd964_p7QjMaMyf1T-2mpq-CqS8QhPuI1Yzw_Tcj/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%2588+%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D-+%25E0%25AE%25B5.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE.+%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg)
பாரதி மீது காட்டிய இலக்கிய அக்கறைக்காக மட்டும் எழுத்து அவரைப் 'பெரியவன்' என்று பாராட்டிவிடாது. பாரதி வழியிலே குட்டி பதினாறடியாக பாய்ந்து தமிழ் இலக்கியத்தைத் தானும் வளப்படுத்தி ஒரு படைதிரட்டி வலுப்படுத்தச் செய்ததுக்காகவே வ.ரா. 'பெரிய எழுத்தாளன்'. பாரதியின் சீடன் மணிக்கொடித் தலைவன் ஆனான். அவர் பேனாவிலே வளர்ந்த மணிக்கொடி ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லை. ஸ்தாபனமாக மட்டும் இல்லை. ஒரு இயக்கமாகவே இருந்தது. தமிழ் இலக்கியம் அதுவரை காணாத சில இலக்கிய உருவங்கள் பிறக்க, வளர பின்னாலும் உண்டாக ஏற்பட வகை செய்த ஒரு இலக்கியத் தலைவன் வ.ரா. 'தமிழ்நாட்டில் ஆழ்ந்த கருத்துக்களோடு எழுதுகிற முதல் தரமான எழுத்தாளர் வ.ரா.' என்பது அவரது தோழர் டி. எஸ். சொக்கலிங்கம் கருத்து. ந. பிச்சமூர்த்தி 'கொள்கைகளுடன் பழகியவர் வ.ரா.' என்று கூறி இருக்கிறார். எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கல்கியே குறிப்பிட்டிருக்கிறார். பாரதிக்குப் பின் தமிழனுக்காக சிந்தித்தவர் வ.ரா. இன்னும் தமிழ் உரைநடையை புதுப்பித்தவர் வ.ரா. அந்த வ.ரா.வை தமிழகம் நினைக்கிறதா?
மணிக்கொடி கோஷ்டி, மணிக்கொடி பரப்பரை, மணிக்கொழி வழி பத்திரிகை என்பதுக்கெல்லாம் மூலவறான அந்த இலக்கியத் தலைவனுக்கு அவன் காட்டிய வழியில் செல்லும் 'எழுத்து' தன் இலக்கிய வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறது.
- ‘எழுத்து’ (ஆகஸ்ட், செப்டம்பர் 66) இதழில் வெளியான தலையங்கம்
விரைவில் வெளிவரும் 'சிந்தனை முதல்வன்: வ.ரா. நினைவோடை' மின் நூலிலிருந்து
விரைவில் வெளிவரும் 'சிந்தனை முதல்வன்: வ.ரா. நினைவோடை' மின் நூலிலிருந்து
Comments
Post a Comment