Skip to main content

நான்கு நூல்கள் அச்சில்

நண்பர்களுக்கு வணக்கம்.

இரண்டு செய்திகள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.

அழிசி இதுவரை வெளியிட்ட மின்னூல்கள் எதுவும் இப்போது கிண்டிலில் கிடைக்காது. சில நாட்களுக்கு முன் அமேசானிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அருண் குமார் என்பவர் க. நா. சு. நூல்களின் பதிப்புரிமை தன்னிடம் உள்ளதாகப் புகார் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. புகார் கொடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை அளித்து, பதிப்புரிமை மீறலுக்காக அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அமேசான் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. க. நா. சு. படைப்புகள் 2004ஆம் ஆண்டிலேயே நாட்டுடைமையானவை என்பதை விளக்கியும் பயனில்லை. புகார் கொடுத்திருந்தவரை மின்னஞ்சலில் தொடர்புகொண்டபோதும் பதில் கிடைக்கவில்லை. மூன்று நாட்களில் கணக்கு முழுமையாக முடக்கப்பட்டு அனைத்து நூல்களும் அமேசான் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. எனவே 2017 முதல் வெளியிட்ட எல்லா நூல்களும் இப்போது விற்பனையில் இல்லை. இப்போதைக்கு மேற்கொண்டு மின்னூல் வெளியீட்டைத் தொடர இயலாது.

-

மின்னூல்களாக வெளியிட்டபோது சிறப்பான வரவேற்பைப் பெற்ற புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்’ நூல் விரைவில் அச்சில் வரவிருக்கிறது. காந்தியைப் பற்றி தி. சு. அவினாசிலிங்கம் அவர்கள் எழுதிய ‘நான் கண்ட மகாத்மா’, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற எல். எஸ். கரையாளரின் சிறையனுபவக் குறிப்புகள் அடங்கிய ‘திருச்சி ஜெயில்’ ஆகியவையும் அச்சில் வரவுள்ளன. இவை மூன்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபதிப்பு காண்பவை. இவற்றுடன் முதல் முறையாக நாரணோ ஜெயராமனின் சிறுகதைகள் ‘வாசிகள்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

நாரத ராமாயணம் - நெடுங்கதை - புதுமைப்பித்தன் - 72 பக்கம் - ரூ. 60

வாசிகள் - சிறுகதைகள் - நாரணோ ஜெயராமன் - 120 பக்கம் - ரூ. 110

நான் கண்ட மகாத்மா - கட்டுரைகள் - தி. சு. அவினாசிலிங்கம் - 192 பக்கம் - ரூ. 170

திருச்சி ஜெயில் - கட்டுரைகள் - எல். எஸ். கரையாளர் - 192 பக்கம் - ரூ. 170

அக்டோபர் 20 வரை நூல்களை முன்பதிவு செய்யலாம். மாத இறுதிக்குள் பதிவு செய்த நூல்கள் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். தனித்தனி நூல்களாகவும் வாங்கலாம். அஞ்சல் செலவு எங்களுடையது.

நான்கு நூல்களும் சேர்த்து ரூ. 400/-

நாரத ராமாயணம், வாசிகள் இரண்டும் சேர்த்து ரூ. 150/-

நான் கண்ட மகாத்மா, திருச்சி ஜெயில் இரண்டும் சேர்த்து ரூ. 300/-

வாட்ஸப் மூலம் பதிவு செய்ய: 7019426274

சிறப்புச் சலுகையில் நூல்களைப் பெற https://azhisi.stores.instamojo.com/

அழிசி நூல்கள் அனைத்தும் Commonfolks இணையதளத்திலும் கிடைக்கும்.

https://www.commonfolks.in/books/azhisi-pathippagam

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

சகுண - நிர்குண பக்தி | வினோபா பாவே

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan இராமனும் கிருஷ்ணனும் ஒருவனே. பரதனும் இலட்சுமணனும் போல்தான் உத்தவனும் அர்ஜுனனும். கிருஷ்ணன் இருக்குமிடத்தில் உத்தவன் இருக்கவே செய்கிறான். உத்தவனால் கிருஷ்ணனை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடிவதில்லை. அவன் எப்பொழுதும் கிருஷ்ணன் பணிவிடையிலேயே மூழ்கியிருப்பவன். கிருஷ்ணன் இல்லாத பொழுது அவனுக்கு உலகமே இரசமற்றதாய் சாரமில்லாததாய்த் தோன்றும். அர்ஜுனனும் கிருஷ்ணனுக்குத் தோழன். ஆனால் அவன் தொலைவில் அஸ்தினாபுரத்தி லி ருந்து வந்தான். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய காரியத்தைச் செய்பவனே. ஆனால் கிருஷ்ணன் துவாரகையிலிருக்க , அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். இருவரின் சம்பந்தம் இத்தகையது. கிருஷ்ணனுக்குத் தன் உடலைத் துறத்தல் அவசியமென்று தோன்றிய பொழுது அவன் உத்தவனிடம் . “ இதோ , நான் போகிறேன் ” என்றான். அதற்கு உத்தவன் , “ என்னை உடன் அழைத்துப் போகமாட்டீரா ? நாம் இருவரும் சேர்ந்தே போவோமே ” என்றான். ஆனால் , கிருஷ்ணன் “ எனக்கு அது பிடித்தமில்லை. சூரியன் தன் ஒளியைத் தீயினிடம் வைத்துவிட்டுப் போவது போல் நான் என் ஒளியை உன்னிடம் விட்டுப்போகின்றேன் ” என்றான். இவ்வாறு பகவ...