Skip to main content

ஆரோக்கிய நிகேதனம் - படிக்குமுன்...


('ஆரோக்கிய நிகேதனம்' நாவல் அமேசான் கிண்டிலில் ஜூலை 23ஆம் தேதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அவர்களின் பிறந்த நாளில் வெளியாகிறது. இந்த நாவலுக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் த. நா. குமாரஸ்வாமி எழுதிய முன்னுரை இது.)

அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. ஸ்ரீ தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அதற்குத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் அளவளாவ அவருடைய அறைக்குச் சென்றேன். அவருடைய நவீனங்களில் ஒன்றான ஆகுன், அப்பொழுது என்னுடன் வைத்திருந்தேன். (இந்நூலை அக்கினி என்ற பெயரில் 1943ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து நான் தாராசங்கரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினேன்) அதனை அவரிடம் தந்து அவர் தம் நினைவை நான் போற்றும் வகையில் ஒரு நல்லுரையை அதில் பதிக்கும்படி வேண்டினேன். அந்நூலின் உட்புறமமாக வங்காளிப் பத்திரிகையொன்றில் வந்த அவர் உருவப்படத்தை ஒட்டிவைத்திருப்பதைப் பார்த்து மென்னகை பூத்து அவர், “எத்தனை வருஷங்களுக்கு முன் எடுத்த என் படம்! அந்த நாட்கள் மறைந்துவிட்டன. இப்போது நான் எவ்வளவோ மாறிப்போய்விட்டேன். இன்று அந்த தாராசங்கரின் மெலிந்த நிழலே நான் என்றதும் அவருடைய கண்கள் கடந்த அத்தொலைவு நாட்களை நோக்கி நிலைத்தன. அந்தப் படத்தின் கீழேயே ஒரு கவிதையை வரைந்து தம் முத்திரையையும் வைத்தார்[1].

அன்னாருடைய மற்றொரு சிறந்த நவீனமான ராஇ கமல்என்ற நூலைப் பின்னர் கமலினி என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.

ஆரோக்கிய நிகேதனம்என்ற அவருடைய இந்நவீனம் முற்றிலும் புது வகையானது. உலகத்துப் பேரிலக்கியங்களின் வரிசையில் இடம்பெறுவதற்கான தகுதியுடையது இது. இதுபோன்ற ஒரு ரசனையை உருவாக்க எழுத்தாளனுக்குத் தன் நாட்டைப்பற்றிய ஆழ்ந்த பரிச்சயம் வேண்டும்; பல்வேறு மக்களுடன் இழைந்து பழகி அவர்கள் நெஞ்சத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் வேண்டும். இவற்றுடன் காவிய நோக்கும் கலந்துவிட்டால் அந்த எழுத்துச்சிற்பம் என்றும் அழியாது. ஜீவன் மஷாய் என்ற பாத்திரமே கதையில் ஊடுபாவாகப் பரவி நிற்கிறது. அவரின்றி இந்நவீனத்தில் ஒரு சிறு நிகழ்ச்சிகூட நகரவில்லை. எத்துணையோ தன்மையான மனிதர் அவருடன் மோதுகின்றனர். காந்தம்  இரும்புத்துகளை இழுத்துக்கொள்வது போல் மையமாக விளங்கும் அவரை நோக்கியே ஈர்க்கப்படுகின்றனர். சித்த வைத்தியர் ஜீவன் மஷாய் ஓர் உயர்வகைக் குணசித்திரம். ஆயிரக்கணக்கான நினைவோட்டங்கள் (Stream of consciousness) கலந்த ஆரோக்கிய நிகேதனம்எக்காலத்தும் படிப்பவர் உள்ளத்தில் ஆழப் பதியவல்லது. நமது நாட்டுப் பண்டைய ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகள் பிற்போக்கானவை, வெறும் பச்சிலைச் சாறும் செங்கல் சூரணமும் கொண்ட விஷயங்கள் என ஒருவகை அலட்சிய மனப்பான்மை பரவியுள்ளது. இந்த நூலைப் படித்தால் இம்மருள் முற்றிலும் விலகும்.

1955இல் இந்நூலுக்கு ரவீந்திர புரஸ்கார் (பரிசு) கிடைத்தது. மறு ஆண்டே சாகித்திய அக்காதெமியும் இதற்குத் தன் பரிசை வழங்கியது. சரத் சந்திரருக்குப் பிறகு வங்க இலக்கிய பீடத்தில் அமர்ந்து அழியா பல இலக்கியங்களைப் படைத்த இவர் இன்று நம்மிடையே இல்லை. அன்னாருடைய இந்நூலைத் தமிழ் வடிவில் தருவதற்கு ஆதரவு தந்த சாகித்திய அக்காதெமியாருக்கு எனது நன்றி. எனது விருப்பம் போல் இதனைச் செம்மையாக அச்சுருவில் வருவதற்குத் துணை நின்ற ஜயம் கம்பனியாருக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாவேன். தமிழ் ஆர்வலர் இதனை ஏற்பரென நம்புகின்றேன்.

சென்னை-35
16-5-1972
தண்டலம் நா. குமாரஸ்வாமி

[1] ஆமார் புராதந கியேச்சே ஹாராயே

ஸந்த்யார் மத்யாஹ்நே கே திபே பிராயே

- தாராசங்கர்.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ