Skip to main content

சகுண - நிர்குண பக்தி | வினோபா பாவே

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan
இராமனும் கிருஷ்ணனும் ஒருவனே. பரதனும் இலட்சுமணனும் போல்தான் உத்தவனும் அர்ஜுனனும். கிருஷ்ணன் இருக்குமிடத்தில் உத்தவன் இருக்கவே செய்கிறான். உத்தவனால் கிருஷ்ணனை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடிவதில்லை. அவன் எப்பொழுதும் கிருஷ்ணன் பணிவிடையிலேயே மூழ்கியிருப்பவன். கிருஷ்ணன் இல்லாத பொழுது அவனுக்கு உலகமே இரசமற்றதாய் சாரமில்லாததாய்த் தோன்றும். அர்ஜுனனும் கிருஷ்ணனுக்குத் தோழன். ஆனால் அவன் தொலைவில் அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய காரியத்தைச் செய்பவனே. ஆனால் கிருஷ்ணன் துவாரகையிலிருக்க, அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். இருவரின் சம்பந்தம் இத்தகையது. கிருஷ்ணனுக்குத் தன் உடலைத் துறத்தல் அவசியமென்று தோன்றிய பொழுது அவன் உத்தவனிடம். இதோ, நான் போகிறேன்என்றான். அதற்கு உத்தவன், “என்னை உடன் அழைத்துப் போகமாட்டீரா? நாம் இருவரும் சேர்ந்தே போவோமேஎன்றான். ஆனால், கிருஷ்ணன் எனக்கு அது பிடித்தமில்லை. சூரியன் தன் ஒளியைத் தீயினிடம் வைத்துவிட்டுப் போவது போல் நான் என் ஒளியை உன்னிடம் விட்டுப்போகின்றேன்என்றான். இவ்வாறு பகவான் இறுதிக் கால ஏற்பாட்டைச் செய்து உத்தவனுக்கு ஞானத்தை அளித்து அனுப்பினார்.
பிறகு யாத்திரையில் உத்தவனுக்கு மைத்திரேய ரிஷியின் மூலம் பகவான் தம் ஊருக்கு (வைகுண்டத்திற்கு)ப் போய்விட்டாரென்று தெரியவருகிறது. ஆனால் அதனால் அவன் மனம் சிறிதும் வருந்தவில்லை. விசேஷமானது ஏதோ நடந்ததாகவே அவனுக்குத் தோன்றவில்லை. குரு இறந்துவிட்டாரென்று சீடன் அழுதான். இருவரும் கற்ற வித்தை பாழாயிற்றுஎன்று சொல்லுவதுண்டே, அந்நிலையில் உத்தவன் இல்லை. பிரிவு நேர்ந்ததாகவே அவன் நினைக்கவில்லை. அவன் தன் ஆயுள் முழுவதும் சகுண உபாசனை செய்தவன். ஆண்டவன் அருகிலேயே இருந்துவந்தவன். ஆனால் இப்பொழுது அவனுக்கு நிர்குணத்தில் இன்பம் தோன்றத் தொடங்கிவிட்டது. இவ்வாறு அவன் நிர்க்குணத்தின் வழியைக் கடக்கவேண்டியதாயிற்று. சகுணம் முதலில், ஆனால் அதை அடுத்தாற்போல் நிர்குணத்தின் படி றியே ஆக வேண்டும். இல்லையேல் பூரணத்துவம் ஏற்படாது.
அர்ஜுனன் நிலையோ இதற்கு நேர்மாறானது. கிருஷ்ணன் அவனை என்ன செய்யச் சொல்லியிருந்தான்? தனக்குப் பிறகு எல்லாப் பெண்டிரையும் பாதுகாக்கும் பொறுப்பை அவன் அர்ஜுனனிடம் ஒப்புவித்திருந்தான். அர்ஜுனன் அஸ்தினாபுரத்தினின்று வந்து துவாரகையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணனது ஸ்திரீகளை அழைத்துக்கொண்டு போனான். வழியில் ஹிபொருக்கருகே பஞ்சாபிலிருந்து வந்த திருடர்கள் அவனை வழிப்பறி செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் அவன் ஒருவனே ஆண்மகன் என்று சொல்லப்பட்டவன், தலைசிறந்த வீரனென்று புகழ் பெற்றவன், தோல்வி என்பதையே அறியாதிருந்தது காரணமாய் விஜயன் (வெற்றி வீரன்) என்று பிரசித்தி பெற்றிருந்தவன், சிவனையே நேருக்கு நேராய் நின்று எதிர்த்துப் பணியச் செய்தவன். அதே அர்ஜுனன் ஆஜ்மீருக்கருகில் ஓட்டமாய் ஓடித் தப்பினான், கிருஷ்ணன் போய்விட்டதனால் அவன் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. உயிரே போய்விட்டது போலும் உயிரும் ஆதரவுமற்ற வெற்றுடலைப் போலும் அவன் ஆகிவிட்டான். அதாவது இடையறாது கர்மம் புரிந்துகொண்டு கிருஷ்ணனிடமிருந்து விலகியே இருந்த நிர்குண உபாசகனான அர்ஜுனனுக்கு இறுதியில் இந்தப் பிரிவு தாளமுடியாததாகிவிட்டது. அவனுடைய நிர்குணம் இறுதியில் பிரிவின் மூலம் பீறிட்டுக்கொண்டு வெளிவந்தது. அவனது காமம் அனைத்துமே முடிந்துவிட்டது போல் ஆயிற்று. அவனுடைய நிர்குணத்திற்கு இறுதியில் சகுணத்தின் அனுபவம் ஏற்பட்டது. சகுணம் . நிர்குணத்திற்குப் போகவும் நிர்குணம் சகுணத்திற்கு வரவேண்டியிருக்கிறது என்பது கருத்து. இவ்வாறு இரண்டுமே ஒன்று மற்றதினால் நிறைவுறுகின்றன.
ஆகையால் சகுண உபாசகன், நிர்குண உபாசகன் ஆகிய இருவரிடையில் உள்ள வேற்றுமை என்னவெனச் சொல்ல முயலும் பொழுது அதைச் சொல்லுவது சிரமமாகிவிடுகிறது. சகுணமும் நிர்குணமும் இறுதியில் ஒன்றாகிவிடுகின்றன. பக்தியின் அருவி முதலில் சகுணத்திலிருந்து தோன்றிய போதிலும் இறுதியில் நிர்குணம் வரை ஓடுகிறது. பழைய காலத்தில் நடந்த விஷயம் ஒன்று. நான் வைக்கம் சத்தியாக்ரஹம் பார்க்கப் போயிருந்தேன். மலையாளத்தின் எல்லையில் சங்கராச்சாரியர் பிறந்த ஊர் இருக்கிறது. பூகோளம் பற்றிய இவ்விஷயம் என் நினைவிலிருந்தது. நான் போய்க்கொண்டிருந்த மார்க்கத்தின் பக்கத்திலேயே எங்கோ சங்கராச்சாரியரது 'காலடி' கிராமம் இருக்குமென்று எனக்குத் தோன்றியதால் உடன் வந்த மலையாளியைக் கேட்டேன். அவர், “இங்கிருந்து 10, 12 மைல் தொலைவு இருக்கும். நீங்கள் அங்கே போக வேண்டுமா?” என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் சத்தியாக்ரஹம் பார்க்கப் போய்க்கொண்டிருந்ததால் எனக்கு வேறெங்கும் போவது உசிதமென்று தோன்றவில்லை. அவ்வாறு செய்தது சரியே என்று எனக்கு இப்பொழுதும் தோன்றுகிறது. ஆனால் இரவில் நான் தூங்கத் தொடங்கிய பொழுது அக்காலடி கிராமமும் சங்கராச்சாரியரது உருவும் மீண்டும் மீண்டும் என்னெதிரில் வந்து சுழன்றுகொண்டிருந்ததால் தூக்கம் கலைந்துபோயிற்று. அந்த அனுபவம் எனக்கு இன்றும் அப்படியே இருந்துகொண்டிருக்கிறது. அந்த ஞானச் சிறப்பும், அவரது அத்தெய்வீக அத்வைத நிஷ்டையும், எதிரில் வியாபித்துள்ள சம்சாரம் அனைத்தும் பொய் என்று முடிவுகட்டும் அசாதாரணமான ஒளி பொருந்திய வைராக்கியமும், அவருடைய கம்பீரமான மொழியும் அவரிடமிருந்து நான் பெற்றுள்ள அளவிலடங்காத உதவியும் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. இரவில் இப்பாவனைகளெல்லாம் எதிரில் வந்து நின்றன. அப்பொழுது இந்த நிர்குணத்தில் சகுணம் எப்படி நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது என்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நேருக்கு நேராய்ச் சந்தித்திருந்தாலும் அவ்வளவு நேசம் இருந்திராது. நிர்குணத்திலும் சகுணம் பூரணமாய் நிரம்பியே இருக்கிறது. நான் பெரும்பாலும் நண்பர்களுக்கு க்ஷேமங்களை விசாரித்துக் கடிதம் எழுதுவதில்லை. ஆனால் எந்த நண்பருக்கும் கடிதம் எழுதாவிட்டாலும் உள்ளுக்குள் அவர் நினைவு எப்பொழுதும் இருந்துகொண்டேதானிருக்கும். கடிதம் எழுதாதிருப்பினும் அவர் நினைவு உள்ளே பூரணமாய் நிரம்பியிருக்கும். நிர்குணத்தில் இவ்வாறு சகுணம் மறைந்து நிற்கிறது. சகுணம், நிர்குணம் ஆகிய இரண்டும் ஒன்றே. விக்கிரகத்தை எதிரில் வைத்துக்கொண்டு பூஜை செய்தல், வெளிப்படையாய்ச் சேவை செய்தல், உள்ளுக்குள் இடையறாது உலகின் நன்மையைக் கோரியவாறே புறத்தே தெரியும்படி எதையும் செய்யாதிருத்தல் ஆகிய இவ்விரண்டிற்குமுள்ள மதிப்பும் சிறப்பும் ஒன்றே.
(கீதைப் பேருரைகளிலிருந்து. ‘சகுண - நிர்குண பக்தி: இரண்டும் ஒன்றே - சொந்த அனுபவம்’ என்ற தலைப்பில் ‘ஆத்ம ஜோதி’ இதழில் வெளியானது.)

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல