Skip to main content

கொள்ளையோ கொள்ளை | கிழக்கு இந்தியக் கம்பெனி வழிமறித்தல் | ஜே. சி. குமரப்பா


இக்கம்பெனியார் இங்கு வந்த காலத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் பிடுங்கி வெளியேற்றி வந்தார்கள். கபடமான முறையில் திருட வேண்டுமென்று ஏற்படவில்லை. வெட்ட வெளிச்சமாகவே கொள்ளையடித்து வந்தார்கள். பிளாஸி யுத்தத்திற்குப் பிறகு இருந்துவந்த நிலைமையை மெகாலே கீழே கூறியுள்ளவாறு வர்ணிக்கிறார்:-
இக்கம்பெனியின் மீதும், அதன் அதிகாரிகள் மீதும் தனமானது மழையைப் போல் கொட்டிக்கொண்டேயிருந்தது. எட்டு லட்சம் பவுன்கள் பெறுமானமுள்ள வெள்ளி ரூபாய்கள் மூர்ஷிதாபாத்தினின்று கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டைக்கு நதி மார்க்கமாக அனுப்பப்பட்டது. அதுவரை காய்ந்து கிடந்த கல்கத்தா இப்பணம் கிடைத்தவுடன் ஒளிபெற்று, ஆடம்பரமடைந்துவிட்டது. உடனே இங்கிலாந்திலும் சுறுசுறுப்பு உண்டாயிற்று. தலைகீழாகப் படுத்திருந்த வியாபாரங்கள் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்கில ஜனங்களுக்கு மீண்டும் மூச்சு வந்துவிட்டதாகவே காணப்பட்டது. எங்கும் பண நடமாட்டம் அதிகமாயிற்று. தன் மனம் திருப்தி அடையும் வரை கிளைவும் திரவியம் சேகரித்துக்கொண்டார். இவரைத் தடுக்கவோ, எதிர்க்கவோ அங்கு யாரும் கிடையாது.
ஆங்கில சாம்ராஜ்யத்திற்கு இந்தியாவில் அடிகோலிய இக் கிளைவ் இங்குக் கொள்ளை அடிக்கும் முறையை முதலில் ஆரம்பித்து நடத்திவைத்தான். இவ்விடம் கொள்ளை கொண்ட திரவியம் முழுவதும் இங்கிலாந்து சென்றடைந்தது. அந்நாட்டிற்கும் போதுமான மூலதனம் கிடைத்தது. மூன்றே வருஷத்திற்குள் சீர்திருத்தப்பட்ட தரி (Fly Shuttle) வெளிக்கொண்டுவரப்பட்டது. அடுத்த நான்கு வருஷங்களுக்குள் புதிய நூல் நூற்கும் இயந்திரம் (Hargreaves Spinning Jenny) வெளிவந்தது. 1768ல் வாட் என்பவர் நீராவி என்ஜினை நிர்மாணித்தார். 1778ல் கிராம்டன் என்பவர் கண்டுபிடித்த மியூல்என்ற நெசவு இயந்திரம் வெளிவந்தது. விசையினால் இயக்கப்படக்கூடிய தரி 1785-ல் பேடன்ட்’ (Patent) செய்துகொள்ளப்பட்டது. இதுவே இங்கிலாந்தில் கைத்தொழில் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் கைத்தொழில் பிற்போக்கிற்கும் அடிப்படையான இதிகாசச் சுருக்கமாகும். ஆராய்ச்சியாளர்களின் யுக்திகளைக் காரியாம்சத்தில் செய்து பரீட்சிக்கத் தேவையான மூலதனம் இவ்வாறு இந்தியாவினின்றே கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டது.
"உலகம் தோன்றிய நாள் முதல் எத்தகைய தொழிலும் பிரிட்டிஷார் இந்தியாவில் நடத்திய கொள்ளையைப்போல் இவ்வளவு அளவற்ற லாபத்தை அளித்ததே கிடையாது; சுமார் ஐம்பது வருஷங்கள் வரை இவர்களுக்கு ஒருவிதமான போட்டியும் இல்லாது ஏகபோகமாக அனுபவிக்க முடிந்தது.''
1750-ல் இங்கிலாந்தில் ஒரு வட்டிக்கடையும் இருக்கவில்லை. ஆனால் 1790-லோ ஒவ்வொரு வியாபார ஸ்தலத்திலும் ஏராளமான வட்டிக்கடைகள் ஏற்பட்டுவிட்டன.
வங்காளத்திலிருந்து வந்த ஏராளமான வெள்ளியின் மூலம் இங்கிலாந்தின் தனம் அதிகரித்ததோடு அல்லாமல் பணத்தின் நடமாட்டமும் பெருகிற்று. 1759-ல் 10, 15 பவுன்களுக்கு நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன. கிராமாந்தரங்களிலும் இந்த நோட்டுகள் ஏராளமாகப் புழக்கத்திற்கு வந்தன.
ஏறக்குறைய பிளாஸி யுத்தம் ஆரம்பித்தது முதல் வாடர்லூ யுத்தம் முடியும் வரை சுமார் பத்தாயிரம் லட்சம் பவுன்கள் மதிப்புள்ள இந்திய திரவியம் இங்கிலாந்து பாங்குகளுக்குச் சென்றிருக்கின்றது. அந்தச் சமயத்து ரூபாய்களுக்குத் தற்கால ரூபாய்களைவிடப் பல மடங்கு அதிகமான மதிப்பு இருந்துவந்தது. ஆகவே இவர்கள் கொண்டு சென்ற இந்தக் கணக்கற்ற தொகையின் மதிப்பை ஊகித்துப் பாருங்கள். இவ்வளவு தொகையையும் கொண்டு போனார்களே, அவைகளைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்துடன் எடுத்துச் சென்றார்களா? அதுதான் இல்லை. ஏனெனில் இவ்வளவு தொகையையும் அவர்களின் நாட்டுக்கு வேண்டிய கடனாகஎடுத்துச் சென்றிருந்தால் இவர்களின் தேசியக் கடன் ஏராளமாக இருக்க வேண்டாமா? 1815-ம் வருஷத்துப் புள்ளிவிவரப்படி இந்நாட்டாரின் தேசியக் கடன் சுமார் 8610 லட்சம் பவுன்கள் என்று கணக்குக் காட்டுகிறார்கள். அதற்கு முன் 50 வருஷமாக இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்ற தொகையில் இது மிகச்சிறு அளவேயாகும்.
முதல் விழுங்குதல்
மேலே சொன்னவை எல்லாம் வெட்ட வெளிச்சமாக, சற்றும் கூச்சமின்றிக் கொள்ளை கொண்ட காலம். இவ்வளவு கொள்ளை அடித்துப் பணக்காரர்கள் என்ற கௌரவமான பட்டம் கிடைத்திருக்கிறது. முன்போல தங்கள் வேலையை வெளிப்படையாகச் செய்துவர சங்கோசப்பட்டார்கள். ஆகவே இந்த இரண்டாவது முறையைக் கையாளத் தொடங்கினார்கள். இந்தியாவில் கிடைத்த வரி வகைகளைக் கொண்டு வியாபாரச் சரக்குகளை வாங்கி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்துவந்தார்கள். இந்த வியாபாரச் சரக்குகள் முழுதும் கம்பெனியார்களின் சொந்தப் பொருள்களாகக் கருதப்பட்டன. முதலில் சொன்ன முறைக்கும், இந்தப் புதிய முறைக்கும் வித்தியாசம் என்ன என்றால், முன்பு பணமாகக் கொண்டுபோனார்கள் என்பதே. இரண்டும் சந்தேகமில்லாமல் கொள்ளைதான்.
கம்பெனியார்கள் இவ்வளவு ஏராளமான திரவியங்களை இங்கிருந்து அள்ளிச்செல்ல முடிந்ததானால் இந்தியாவுக்குப் பொதுக்கடன் உண்டாகியிருக்கக் காரணமே இல்லை. சற்று கௌரவமான முறையில் இந்திய திரவியங்கள் யாவற்றையும் இங்கிலாந்து பாங்குக்குக் கொண்டு சேர்த்தார்கள். கம்பெனியார் இந்தியாவின் அரசாங்கம் நடத்தும் பொறுப்பு ஏற்றிருந்தார்கள். குடிபடைகளிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது திரும்ப அவர்களின் நலனிற்காகவும் தேச முன்னேற்றத்திற்காகவும் செலவு செய்யப்படவேண்டும். நாட்டின் வரியை மனம் போனபடி செலவு செய்தல் நீதியான அரசுமுறை ஆகாது. அப்படி இருக்க கிடைத்த வரி யாவற்றையும் வியாபாரச் சரக்குகளாக மாற்றி வெளிநாடு அனுப்பிவைப்பது என்பது மிக்க கொடுமையான தேசத் துரோகமாகும். இதனால் குடிபடைகள் மிகவும் அல்லலுற்றார்கள். ஒவ்வொரு தடவையும் வரி செலுத்தினார்களே ஒழிய அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கத்தாரிடமிருந்து யாதொரு நலனையும் பெற்றார்களில்லை. 1793 முதல் 1812 வரையில் வருஷம் ஒன்றுக்குச் சராசரி 130 லட்சம் பவுன்கள் வீதம் இவ்வரிப்பணம் நாடுகடத்தப்பட்டிருக்கிறது.

கொள்ளையோ கொள்ளை மின் நூலை வாங்க,
https://tinyurl.com/KollayoKollai

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...