Skip to main content

க.நா.சு.வின் இலக்கியப் பட்டியல்


உலக இலக்கியச் சிகரங்கள்
(இதை ஒரு முழுமையான பட்டியல் என்று கொள்ளக் கூடாது)
நாம் தமிழர்கள் என்பதனால் தமிழில் பல நூல்களையும் இந்தியர்கள் என்பதனால் இந்தியாவின் பல நூல்களையும், ஆசியாவைச் சேர்ந்தவர்களென்பதினால் ஆசியாவின் நூல்கள் பலவற்றையும், ஐரோப்பிய அமெரிக்க இலக்கியம் இந்தக் கால கட்டத்தில் முக்கியமென்பதினால் ஐரோப்பிய அமெரிக்க நூல்கள் பலவற்றையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறேன். வேறு விதமாகவும் பட்டியல் போட முடியும், என்னுடைய பட்டியல்தான் முடிவானது என்பதில்லை!
தமிழ் நூல்கள்
திருவள்ளுவர், திருக்குறள்
சங்க இலக்கியக் கவிதைகள், 5000, 6000 வரிகள்
மாணிக்கவாசகர், திருவாசகம்
திருமந்திரத்தில் சில பகுதிகள்
காரைக்கால் அம்மையார், அற்புதத் திருவந்தாதி
ஆழ்வாராதிகளில் ஒரு தொகுப்பு
சைவத் திருமுறைகளில் ஒரு தொகுப்பு
ஆண்டாள் பாசுரங்கள்
முத்தொள்ளாயிரம்
இளங்கோ சிலப்பதிகாரம்
கம்ப ராமாயணம் (பகுதி)
சித்தர் பாடல்கள்--ஒரு தொகுப்பு
தனிப் பாடல்கள்- ஒரு தொகுப்பு
தாயுமானவர்--சில பாடல்கள்
ஜோதி ராமலிங்கம்-சில பாடல்கள்
வேதநாயகம் பிள்ளை -பிரதாப முதலியார்
ராஜம் ஐயர்-கமலாம்பாள்
சுப்ரமணிய பாரதி வசனமும் கவிதையும் ஒரு தொகுப்பு
புதுமைப்பித்தன்-15 கதைகள்
தமிழ்ச் சிறுகதைகள்- ஒரு தொகுப்பு
ஒரு வசன நூல் திரட்டு
ஆர், ஷண்முக சுந்தரம்-நாகம்மாள்
க. நா. சுப்பிரமணியம் பொய்த்தேவு
தி. ஜானகிராமன் மோக முள்
ந. சிதம்பர சுப்ரமணியன் இதய நாதம்
அசோக மித்திரன் 18வது அட்சக்கோடு
சா. கந்தசாமி அவனானது
நகுலன் நினைவுப்பாதை
புதுக்கவிதை ஒரு தொகுப்பு
நாஞ்சில் நாடன் மிதவை
திறனாய்வுக் கட்டுரைகள் ஒரு தொகுப்பு
உ. வே. சுவாமிநாத ஐயர், ஒரு கட்டுரைத் தொகுப்பு
திரு. வி. க.
நாமக்கல் இராமலிங்கர், என்கதை
மரபுக் கவிதைகள் ஒரு தொகுப்பு
இ. எஸ். எஸ். ராஜன், நினைவு அலைகள் 
இந்திய நூல்கள்
உபனிஷத்துக்கள் ஒரு தொகுப்பு
தம்ம பதம், அக்கினிப்பிரசங்கம்
அசுவகோஸர் புத்த சரிதம்
வால்மீகி இராமாயணம்
மகாபாரதம் ஒரு சுருக்கம்
காளிதாசன் சாகுந்தலம்
காளிதாசன் குமார சம்பவம்
சூத்ரக; மிருஸ்சகடிகம்
சம்ஸ்கிருதச் சிறு கவிதைகளில் ஒரு தொகுப்பு
பிராக்ருதக் கவிதைகளில் ஒரு தொகுப்பு
கதாசரித்ர சாதகம்
விக்கிரமாதித்தன் சரித்திரம்
அலங்கார சாஸ்திரம் துவண்யாலோக வக்ரோத்தி
ஒரு தொகுப்பு
பிரேம்சந்த் கோதான்
பிரேம்சந்த் சிறுகதைகள் ஒரு தொகுப்பு
அக்கேய; சிறுகதைகள் ஒரு தொகுப்பு
பீந்திரநாதத் தாகூர் சிறுகதைகள் ஒரு தொகுப்பு
ரபீந்திரநாதத் நாடகங்கள் ஒரு தொகுப்பு
பங்க்கிம்; கபால குன்டகா
விபூதி பூஷன் பபேர் பாஞ்சாலி
மாணிக் பந்தோப் பார்த்தேயா; பொம்மலாட்டம்
வங்கச் சிறுகதைகள் ஒரு தொகுப்பு
S. N. பென் சே; முரடன் பாபு
ஃபசிர்மோகன் ஸேனாபதி: புள்ளி எட்டு
வீரேந்திர குமார் பட்டாச்சாரியா மிருத்தியஞ்ஜெய
பக்ஷிர் மூன்று சிறு நாவல்கள்
காரந்த் மண்மனம்
மாஸ்தி சிறுகதைகள்
பல இந்திய மொழிகளிலிருந்து ஒரு சிறுகதைத் தொகுப்பு:
இந்தியப் புதுக் கவிதைகள் ஒரு தொகுப்பு
இந்தியக் கவிதைகள் ஒரு தொகுப்பு
இந்தியக் கட்டுரைகள் ஒரு தொகுப்பு 
ஆசிய நூல்கள்
பிர்தவுஸி ஷாநாமா
ஹாபிஸ் சிந்தனைகள்
சாதி குலிஸ்தாஸ்
சூபிக் கதைகள்
அரபிக் கதைகள்
கன்ஃபூஸியஸ்-தொகுப்பு:
லாவ்ஸே-டால்
ஜென் கதைகள்
லேடி முராஸக்கி ஜெஞ்சிக் கதைகள்
நவீன ஜப்பானியர் சிறுகதைகள் ஒரு தொகுப்பு:
சுஸாகோ என்டோ! அதிசய முட்டா
நவீன சீனக் கதைகள்
லீபோ கவிதைகள்
டூபு கவிதைகள்
ஒரு ஜப்பானியக் கவிதைத் தொகுப்பு
ஒரு சீனக் கவிதைத் தொகுப்பு
குரங்கு சீன நாவல்
ஆசியச் சிறுகதைகள் ஒரு தொகுப்பு
ஆசியக் கவிதைகள் ஒரு தொகுப்பு 
ஐரோப்பிய அமெரிக்க நூல்கள்
ஹோமர் இரண்டு காவியங்கள்-இலியாது, ஒடிஸி,
ஏஷ்கிலஸ்-சோக நாடகங்கள்
சோபாகிலிஸ் சோக நாடகங்கள்
யூரிபிடீஸ் நாடகங்கள்
அரிஸ்டபேன்ஸ் நாடகங்கள்
பிளேடோ ஒரு ரிப்பப்லிக் சில தொகுப்புகள்
சாக்ரடீஸ் சில சம்பாஷனைகள்
கிரேக்கக் கவிதைகள் ஒரு தொகுப்பு
புளூடார்க் ஜீவிய சரித்திரங்கள் சில
அரிஸ்டாட்டில் பெயட்டிக்ஸ், ஈதிக்ஸ்
மார்க்கஸ் அரேலியஸ் ஆத்ம சிந்தனை
வர்ஜில் ஏணியர்
லத்தீன் புதுக்கவிதைகள், ஒரு தொகுப்பு
டால்டே தேவ ஜீவனம்
பொக்கேச்ஸியோ டெக்கேமரான்
ஸர்வேன்டீஸ் டான் க்விகோட்டே
ஷேக்ஷ்பியர் நாடகங்கள் (20 வரையில்)
மோலியர் நாடகங்கள் சில
மான்டேன் கட்டுரைகள் சில
டாஸ்டாவ்வஸ்கி கரமஸாக் (சகோதரர்கள்)
டால்ஸ்டாய் அண்ணாக் கரிதினா
பால்ஸாக் தகப்பன் கோரியோ
ஸ்டென் தால் சிவப்பும் கருப்பும்
லேகர் லெவ் கெஸ்டா பெர்லிங்
லேகர் க்விஸ்ட் பாரபாஸ்
நட் ஹேம்ஸன் நிலவளம்
லாரன்ஸ் ஸ்டேர்ன் டிரிஸ்ரம் ஷாண்டி
ஸ்வீபட் கல்லிவர் டிராவெல்ஸ்
ஜேன் ஆஸ்டன் எம்மா
ஜார்ஜ் எலியட் மிடில் மார்ச்
கர்ணல்டி டிக்கன்ஸ் டேவிடு காப்பர் பீல்டு
மார்ஸல் புரூஸ்ட் நினைவுகள்
ஜேம்ஸ் ஜாய்ஸ் யுலீஸியஸ்
காப்கா கதைகள் ஒரு தொகுப்பு
தாமஸ்மன் ஜோசப்பும் அவன் சகோதரர்களும்
ஐரோப்பிய மொழிகளில் ஒரு சிறுகதைத் தொகுப்பு
ஐரோப்பிய மொழிகளில் நவீன கவிதைத் தொகுப்புகள்
வால்ட் விட்மென் புள்ளின் இதழ்கள்
எமர்ஸன் கட்டுரைகள்
மெல்வில் மோபிடிக்
வையில்டர்ஸேண்லான்லீயீஸ்ரே பாளம்
மார்க்குவஸ் ஒரு நூறாண்டுத் தன்மை
போர் ஹஸ் சிறுகதைகள்
மோபாஸான் சிறுகதைகள்
பிளோ பேர் மேடம் பெளரி
செக்கோவ் சிறுகதைகள்
செக்கோவ் நாடகங்கள்
ஹென்றிக் இப்ஸன் சில நாடகங்கள்
ஸ்டிரிண்ட் பேர்க் சில நாடகங்கள்
மேக்ஸிம் கார்க்கி சிறுகதைகள் தொகுப்பு
ரில் கே (கவிதைகள்)
லோர்கா (கவிதைகள்)
எலியட் (கவிதையும் விமர்சனமும்)
டபுள்யூபீ லேட்ஸ் - கவிதைகள்
போல்வெலரி (கவிதைகள்)
ரெனேச்சார் (கவிதைகள்)
ஐரோப்பிய, ஆங்கில, விமர்சனக் கட்டுரைகள் ஒரு தொகுப்பு, கார்ளல் லேம்ப் கட்டுரைகள் ஒரு தொகுப்பு, ஆர்.எஸ்.எஸ் கட்டுரைகள் ஒரு தொகுப்பு.
சிறியதும் பெரியதுமாகச் சுமார் 150 நூல்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன. இதை நூறு என்று குறைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் குறைக்கக் கூடாது. முந்நூறு அளவிற்குப் புதுசு புதுசாகச் சேர்த்துக்கொண்டும் போகலாம். உலகத்தின் புராணக் கதைகள் எல்லாம் தெரிந்திருந்தால் நல்லது. அதே போல மதச்சார்பான பல நூல்கள் உண்டு. 300 புஸ்தகங்கள் வரையில் 60 வயது வரையில் உயிருடனிருந்தால் நிச்சயமாகப் படிக்கலாம். 20 வயது முதல் 60 வயது வரை படிக்கும் நூல்கள் சில நூறு நூல்கள் என்று கொண்டால் ஆண்டில் ஆறு ஏழு நூல்களாவது படிக்க வேண்டும். பல நூல்களை இரண்டாவது முறை படிக்கவும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். படிக்கின்ற நூல்களைப் பல தடவைகள் படிப்பது நல்லது.
  • (புதுவைப் பல்கலைக் கழகம், தமிழியல் துறை 1989ஆம் ஆண்டு வெளியிட்ட க.நா.சு.வின் 'உலக இலக்கியம்' என்ற நூலில் 'உலக இலக்கியச் சிகரங்கள்' என்ற தலைப்புடன் உள்ள பட்டியல்.)

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர