Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 5


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1924 (வயது 55)

குடல் அனுபந்த நோயினால் காந்திஜி ஜனவரி 12-இல் திடீரென்று பீடிக்கப்பட்டார். இது நாடெங்கும் கவலையை உண்டு பண்ணியது. கர்னல் மாடோக், ஆபரேஷன் செய்தார். இந்த டாக்டர் அப்போது உபயோகித்த மின்சார விளக்கு, ஆபரேஷன் பாதி முடிந்துகொண்டிருந்தபோது திடீரென்று நின்றுவிட்டது. ஆபரேஷன் முடியும் வரையில் நர்ஸ், அரிக்கன் லாந்தரைப் பிடித்துக்கொண்டு நின்றார். பிப்ரவரி 5-இல் காந்திஜி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார். தேகாரோக்கியம் பெறுவதற்காக அவர் ஜூஹவுக்குச் சென்றார். தேசபந்து தாஸும், மோதிலால் நேருவும் காங்கிரஸ் கொள்கைக்குப் புது அமைப்பைக் கொடுத்தனர். 1923-இல் சட்டசபைகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியார் பெரும் வெற்றி பெற்றனர்.

மார்ச்சு 22-ஆம் தேதி ரொமேன் ரோலாந்துக்குக் காந்திஜி முதல் கடிதம் எழுதினார். இதுவே அவர்கள் நட்பிற்குப் பூர்வாங்கமாகும்.

ஏப்ரல் முதல் வாரத்தில் ''எங் இந்தியா'' , "நவ ஜீவன்'' ஆகியவற்றின் ஆசிரியர் பதவியைக் காந்திஜி திரும்பவும் ஏற்றுக்கொண்டார். சிறைச்சாலை நாட்குறிப்பும், சுயசரிதையும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.

தேசபந்து தாஸும் மோதிலாலும் ஜூஹுவுக்குச் சென்று, புதிய நிலைமையைக் காந்திஜிக்குத் தெரிவித்தனர். ஆனால், அவர்களுடைய கருத்துடன் ஒன்றுபடக் காந்திஜி மறுத்துவிட்டார். அவர் மே மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: "சுயராஜ்யக் கட்சியார் என்ன செய்கிறார்கள் அல்லது என்ன சொல்லுகிறார்கள் என்பது பற்றி மாறுதல் வேண்டாதார் கவலைப்படவேண்டாம் என்றும், தங்கள் முழு ஆற்றலையும் கவனத்தையும் செலுத்தி நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கவேண்டும் என்றும் நான் ஆலோசனை கூறுகிறேன்.''

ஜூன் 27, 28-இல் அகமதாபாத்தில் கூடிய . . கா. . கூட்டத்தின் தீர்மானத்திற்கு இது வழி செய்து கொடுத்தது. காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் எல்லோரும், ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி நூலாக 2,000 கெஜம் அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டது. அந்நியத் துணி, கோர்ட்டுகள், பாடசாலைகள், கல்லூரிகள், பட்டங்கள், சட்டசபைகள் ஆகியவற்றைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்பது மீண்டும் அழுத்தமாக வற்புறுத்தப்பட்டது. அரசாங்கத்தின் இரட்டைக் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. ஏர்னஸ்ட் டேயை கோபிநாத் சஹா கொலை செய்ததைக் கண்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேறியது. இத்தீர்மானத்தை எதிர்த்துச் சில சகபாடிகள் வோட்டளித்ததைக் கண்டு காந்திஜி ஏமாற்றம் அடைந்தார். பகிரங்கமாக அழுதார்.

டில்லி, குல்பர்கா, நாகபுரி, லட்சுமணபுரி, ஷாஜஹான்பூர், அலகாபாத், ஜபல்பூர், கோஹட் ஆகிய இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன. கலவரங்கள் பற்றிக் காந்திஜியும் மெளலானா ஷௌகத் அலியும் அறிக்கை தயாரித்தனர்.

கோஹட் சம்பவங்களின் பலனாக காந்திஜி 21 நாள் உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தார். அவர், ''நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை; என்னையே குற்றஞ்சாட்டிக்கொள்ளுகிறேன்'' என்றார். செப்டம்பர் 18-ஆம் தேதி முகம்மது அலியின் வீட்டில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். செப்டம்பர் 26-இல் எல்லாச் சமூகங்களின் தலைவர்களும் டில்லிக்கு விரைந்தனர். ஏழு நாள் மகாநாடு நடத்தி, காந்திஜியின் தீர்மானங்களை அமல் செய்வதற்கும், அவற்றை மீறி நடப்பவர்களைக் கடுமையாகக் கண்டனம் செய்வதற்கும் உத்தரவாதம் அளிக்கத் தம்மால் இயன்றதை எல்லாம் செய்வதென்று பிரதிக்ஞை செய்து கொண்டார்கள்.

நவம்பர் 23, 24- இல் கூடிய . . கா. . கூட்டத்தில், சட்டசபைப் பிரவேசம் சம்பந்தமாக தாஸ், மோதிலால் ஆகியோர் கருத்துக்குக் காந்திஜி இணங்கினார்.

டிசம்பரில் நடைபெற்ற பெல்காம் காங்கிரஸுக்குக் காந்திஜி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மகாநாடுகளின் தலைமை உரைகளில் இதுவே மிகவும் சுருக்கமானது. இதன் சுருக்கமே பகிரங்கக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. கதர் அணிவதையும் அந்நியத் துணியைப் பகிஷ்கரிப்பதையும் காந்திஜி வற்புறுத்தினார். சட்டசபைப் பிரவேசத்தைக் காங்கிரஸ் அனுமதித்தது.

காந்திஜியின் யோசனைப்படி காங்கிரஸின் காரியதரிசியாக ஜவாஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கூடுவதற்குச் சற்று முன்னதாகத் தாஸ் தம்முடைய சொத்துக்கள் அனைத்தையும் தேசத்துக்குக் கொடுத்துவிட்டார். 
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...