Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 4



(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1923 (வயது 54)

வகுப்புவாத வேற்றுமைகளால் அரசியல் சூழ்நிலையில் கறை படிந்தது.

மே, முதல் தேதியன்று காந்திஜி சிறைச்சாலை சூப்பரின்டெண்டென்டுக்கு எழுதி, மற்ற அரசியல் கைதிகளுக்கு விசேஷச் சலுகைகள் அளிக்கப்படாமலிருக்கும் வரையில் தமக்கும் சலுகைகள் வேண்டாம் என்று தெரிவித்தார்.

செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் டில்லியில் காங்கிரஸின் விசேஷ மகாநாடு நடைபெற்றது. மெளலானா ஆஸாத் தலைமை வகித்தார். சட்டசபைப் பிரவேசம் அனுமதிக்கப்பட்டது. சட்ட சபைப் பிரவேசத்தை எதிர்த்து நடந்துவந்த பிரசாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. நிர்மாணத் திட்டம் வற்புறுத்தப்பட்டது. வகுப்புக்களுக்கிடையே உள்ள உறவுகள் சம்பந்தமாகத் தமக்குத்தாமே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு எழுதுமாறு பத்திரிகைகளுக்கு ஆலோசனை கூறப்பட்டது. கதரை வாங்குவதன் மூலம் அந்நியத் துணியைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. சுதேசிச் சாமான்களை ஆதரித்து, பிரிட்டிஷ் சாமான்களைப் பகிஷ்கரிப்பதற்கான வழிவகைகளைத் தீர்மானிக்கக் கமிட்டி நியமிக்கப்பட்டது.

தமக்கு அளித்து வந்தது போன்ற உணவைச் சகோதரக் கைதி ஒருவருக்கு அளிக்காத காரணத்தால் தம்முடைய உணவையும் கட்டுப்படுத்தும்படி நவம்பரில் சிறை அதிகாரிகளைக் காந்திஜி கேட்டுக்கொண்டார்.

டிசம்பரில் காகினாடாவில் காங்கிரஸ் மகாநாடு நடை பெற்றது. மெளலானா முகம்மது அலி தலைமை வகித்தார். நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், பலமான சட்ட மறுப்பு இயக்கத்துக்குத் தயாராவதற்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. சட்டசபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்பது திரும்பவும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அகில இந்தியத் தொண்டர் படை ஸ்தாபனத்திற்கு - ஹிந்துஸ்தான் சேவா தளத்துக்கு - அஸ்திவாரம் போடப்பட்டது. 
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத