Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 4



(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1923 (வயது 54)

வகுப்புவாத வேற்றுமைகளால் அரசியல் சூழ்நிலையில் கறை படிந்தது.

மே, முதல் தேதியன்று காந்திஜி சிறைச்சாலை சூப்பரின்டெண்டென்டுக்கு எழுதி, மற்ற அரசியல் கைதிகளுக்கு விசேஷச் சலுகைகள் அளிக்கப்படாமலிருக்கும் வரையில் தமக்கும் சலுகைகள் வேண்டாம் என்று தெரிவித்தார்.

செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் டில்லியில் காங்கிரஸின் விசேஷ மகாநாடு நடைபெற்றது. மெளலானா ஆஸாத் தலைமை வகித்தார். சட்டசபைப் பிரவேசம் அனுமதிக்கப்பட்டது. சட்ட சபைப் பிரவேசத்தை எதிர்த்து நடந்துவந்த பிரசாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. நிர்மாணத் திட்டம் வற்புறுத்தப்பட்டது. வகுப்புக்களுக்கிடையே உள்ள உறவுகள் சம்பந்தமாகத் தமக்குத்தாமே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு எழுதுமாறு பத்திரிகைகளுக்கு ஆலோசனை கூறப்பட்டது. கதரை வாங்குவதன் மூலம் அந்நியத் துணியைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. சுதேசிச் சாமான்களை ஆதரித்து, பிரிட்டிஷ் சாமான்களைப் பகிஷ்கரிப்பதற்கான வழிவகைகளைத் தீர்மானிக்கக் கமிட்டி நியமிக்கப்பட்டது.

தமக்கு அளித்து வந்தது போன்ற உணவைச் சகோதரக் கைதி ஒருவருக்கு அளிக்காத காரணத்தால் தம்முடைய உணவையும் கட்டுப்படுத்தும்படி நவம்பரில் சிறை அதிகாரிகளைக் காந்திஜி கேட்டுக்கொண்டார்.

டிசம்பரில் காகினாடாவில் காங்கிரஸ் மகாநாடு நடை பெற்றது. மெளலானா முகம்மது அலி தலைமை வகித்தார். நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், பலமான சட்ட மறுப்பு இயக்கத்துக்குத் தயாராவதற்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. சட்டசபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்பது திரும்பவும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அகில இந்தியத் தொண்டர் படை ஸ்தாபனத்திற்கு - ஹிந்துஸ்தான் சேவா தளத்துக்கு - அஸ்திவாரம் போடப்பட்டது. 
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...