Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | கற்றுக் கொடுத்தது யார்? | பெ. தூரன்


ப்பொழுதுதான் பிறந்த கன்றுக்குட்டி மெதுவாக முயன்று எழுந்து நிற்கிறது. தாய்ப் பசுவின் பால் சுரக்கும் மடியருகே சென்று பால் குடிக்கத் தொடங்குகிறது. மடியிலே வாயை வைத்துப் பால் குடிக்க அதற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்?
வாத்துக் குஞ்சு முட்டையினின்றும் வெளிவருகிறது; தண்ணிரைக் கண்டதும் அதில் உடனே இறங்கி நீந்துகிறது. அதற்கு யார் நீந்தக் கற்றுக் கொடுத்தார்கள்?
குளவி ஒன்று பருவம் அடையும்போது கூடு கட்டத் தொடங்குகிறது. அதில் பக்கத்திலே முட்டையிடுகிறது. புழுவொன்றைப் பிடித்து வந்து கூட்டிலே வைக்கிறது. புழுவைத் தன் கொடுக்கால் கொட்டி அது நினைவற்று ஆனால் உயிரோடு கிடக்கும்படி செய்கிறது. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்த பிறகு அவற்றிற்கு உணவாகப் பக்கத்திலேயே இப்படிப் புழுவை வைத்துக் கூட்டை மூடிவிட்டு வெளியேபோய் இறந்துவிடுகிறது. அந்தக் குளவிக் குஞ்சுகள் பெரிதாகும்போது அவைகளும் இதே போன்று செய்கின்றன. அவற்றிற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? கற்றுக் கொடுக்கத் தாய்க்குளவிகூட இல்லையே? பிறகு எப்படி அந்தக் குஞ்சுகளும் தாய் செய்ததுபோலவே செயல் புரிகின்றன?
இவ்வாறு கற்றுத் தெரிந்துகொள்ளாத செயல்களைச் செய்யும்படி தூண்டும் பிறவி ஆற்றல் ஒன்றிருக்கிறது. அதற்குத்தான் இயல்பூக்கம் (lnstinct) என்று பெயர் வழங்குகின்றது. உணவு தேடூக்கம், கூடி வாழூக்கம், இடம் பெயரூக்கம், கலவியூக்கம் என்றிப்படிப் பல இயல்பூக்கங்கள் இருப்பதாக மெக்டுகல் போன்ற உளவியலறிஞர்கள் குறிப்பிடுகிருர்கள். ஒவ்வொரு இயல்பூக்கத்திற்கும் ஏற்றவாறு உள்ளக் கிளர்ச்சிகளும் உண்டு என்று கூறுவர்.
இயல்பூக்கத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களுண்டு. இயல்பூக்கம் என்பதே இல்லை என்பாரும் உளர். இயல்பூக்கம் இருந்தாலும் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் முதலியவற்றிடம் அதன் ஆதிக்கத்தைக் காணலாம்; மனிதனிடத்தில் அதற்கு ஆதிக்கமில்லை என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.
இயல்பூக்கமே இல்லையென்று மறுக்கிறவர்கள் தமது ஆராய்ச்சிகளினால் இயல்பூக்கச் செயலாக எண்ணிவந்த சில செயல்களின் காரணத்தைக் கண்டுபிடித்து அச்செயல்கள் சாதாரணமான அனுபவத்தால் அல்லது அறிவினால் ஏற்பட்ட நடத்தை என்று கூறுகிறார்கள்.
கும்மென்று இருண்டு கிடக்கும் குகையினுள்ளே வெளவால் தாராளமாகப் பறந்து வட்டமிடுகிறது. நீட்டிக்கொண்டிருக்கும் கரடுமுரடான கற்களின் மேலே அது மோதிக்கொள்வதே இல்லை. ஒருவேளை இருட்டிலே அதற்குக் கண் நன்றாகத் தெரியுமோ என்று சந்தேகித்து அதன் கண்களே மூடிக் கட்டிப் பறக்கவிட்டார்கள். அப்பொழுதும் அது எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் இருண்ட குகைக்குள்ளே தாராளமாக வட்டமிட்டது! இதை இயல்பூக்கச் செயல் என்று முதலில் நம்பிக்கொண்டிருந்தார்கள். 1940-ஆம் ஆண்டிலே டொனல்டு கிரிப்பின், ராபர்ட் கலம்பாஸ் என்ற இரண்டு உயிரியலறிஞர்கள் இந்த அற்புதச் செயலின் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். கண்களை மூடிவிட்டாலும் இருட்டிறையிலே வெளவால் எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் பறக்கிறது. ஆனால் அதன் காதுகளே முடிவிட்டால் கண்கள் திறந்திருந்தாலும் அது இருட்டில் பறக்கும்போது பல இடங்களில் மோதிக்கொள்கிறது! இந்த ஆராய்ச்சியிலிருந்து ஓர் உண்மை தெரியவந்தது. வெளவாலுக்கு நுட்பமான ஒலியைக் கேட்டு அறிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. அதனால் அது பறக்கும்போது உண்டாகும் நுட்ப ஒலிகள் எதிரிலுள்ள தடைகளின் மேல் பட்டுத் திரும்பிப் பிரதிபலித்து வரும்போது அவற்றைச் சற்றுத் தொலைவிலேயே உணர்ந்து தடைகளே விட்டு விலகித் தப்பிச் செல்கின்றது. இங்கே இயல்பூக்கச் செயல் ஒன்றும் இல்லை என்று அவர்கள் கண்டார்கள்.
ஆனல் எல்லா இயல்பூக்கங்களையும் இவ்வாறு ஆராய்ந்து அவற்றிற்குக் காரணங் கூறுவது கடினம். அத்தனை பெரிய ஆராய்ச்சியிலே நாம் ஈடுபட வேண்டியதுமில்லை. இயல்பூக்கங்களைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்துகொள்வதோடு அவை மனிதனுடைய செயல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் தெரிந்து கொண்டால் போதும்.
இயல்பூக்கம் என்பது முன் அனுபவம் இல்லாமல் இயல்பாகவே செய்யப்படும் காரியமாகும். கன்று பாலூட்ட முன்பே கற்றுக்கொள்ளவில்லை. இயல்பூக்கமாகக் கன்று அதைச் செய்கிறது. யாரும் கற்றுக் கொடுக்காமல் குளவி கூடு கட்டி அதில் புழுவை வைத்து முட்டையிடுகின்றது. இவ்வாறு ஒரு பிராணியின் நலத்திற்கும், அதன் இனத்தை அழிந்து போகாமல் பாதுகாப்பதற்கும் இயல்பூக்கச் செயல் உதவுகிறது. ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லாப் பிராணிகளும் ஒரே வகையான இயல்பூக்கச் செயல்களைக் கொண்டிருக்கின்றன. தூக்கணங்குருவிகளில் ஒன்று கூடு கட்டுவது போலவே மற்றத் தூக்கணங்குருவிகளும் கூடு கட்டுகின்றன. இயல்பூக்கத்தின் மற்றொரு தன்மை என்னவென்றால் அனுபவத்தால் பழக்கத்திற்கு வரும் செயல்களுக்கு அது முதலில் தூண்டுகோலாக இருக்கிறது.
விலங்குகள் இயல்பூக்க நிலையிலே பல செயல்களைச் செய்கின்றன. மனிதனும் குழந்தைப் பருவத்தில் அவ்வாறே செய்கிறான். ஆனால் அவன் முதிர்ச்சியடைய அடைய அறிவாலும் அனுபவத்தாலும் இயல்பூக்கச் செயல்கள் மாறுதலடைகின்றன. மனிதனுடைய சிந்தனையால் மாறுதலடையாத இயல்பூக்கச் செயல்களும் குறைந்துவிடும்.
கலவியூக்கம் மிக வலிமையுடையதுதான். ஆனால் மனிதன் விலங்கு போல நடந்துகொள்ளலாமா? அந்த இயல்பூக்கம் பண்புள்ள மனிதனிடத்தே தொழிற்படும் போது அதிலே ஒரு கட்டுப்பாடு வளர்ந்துள்ளது. அதை அவன் மீறினல் சமூகம் அவனைப் போற்றாது.
இயல்பூக்கங்களை ஒடுக்கி அழிக்க முயல்வது வெற்றி பெறாது. ஆனால் விரும்பத்தகாத இயல்பூக்கங்களை வேறு நல்ல துறைகளில் செல்லும்படியாக மாற்றி விடலாம்.
எப்படி மாற்றுவது? அது முடியுமா? முடியும். போரிடும் இயல்பூக்கம் மனித இனத்துக்கு உண்டு என்பார்கள். அந்த இயல்பூக்கத்தால் மிகுதியாக உந்தப்பட்டு ஒருவன் தனது தோழர்களுடனேயே சண்டையிடலாம். அதை மாற்றி அவன் தன் நாட்டிற்காகப் போரிடும்படி செய்யலாம். அல்லது மனித இனத்தைப் பீடிக்கும் கொசு போன்றவற்றை ஒழிக்க அவன் முன்வரலாம்.
இவ்வாறு இயல்பூக்கத்தை மாற்றிவிடுவதற்கு உயர்மடைமாற்றம் (Sublimation) என்று பெயர்.
இயல்பூக்கத்தோடு தொடர்புடைய உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றி அடுத்த பகுதியில் விவரிக்கும் போது இந்த உயர் மடைமாற்றத்தைப் பற்றி மேலும் ஆராய்வோம்.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப